நடிகை கடத்தி பாலியல் துன்புறுத்தல்.. வெங்கய்ய நாயுடு கண்டனம்
பிரபல நடிகை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதற்கு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி: பிரபல நடிகை கேரளாவில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டார். இந்த சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் இரண்டு நாட்களுக்கு முன்பு பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, காரில் வந்த ஒரு கும்பல் அவரை கடத்தி துன்புறுத்தியது. இது பெரிய சர்ச்சையை உருவாக்கியது.

நடிகைக்கு ஏற்பட்டுள்ள இந்த சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற குற்றங்களை தடுக்க முன்னுதாரணமாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மீது பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்துவோரை விரைந்து விசாரித்து தண்டனை வழங்கப்படும் வகையில் புதிய மசோதாவை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications