ஜியோ பயன்பாட்டாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி... பிரைம் ஜியோ திட்டத்தில் கூடுதல் டேட்டா!
ரிலையன்ஸ் ஜியோ பிரைம் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட டேட்டாவுடன் கூடுதலாக 5 ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவில் மார்ச் 31-க்கு பிறகு, பிரைம் ஜியோ திட்டங்கள் குறித்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கூடுதலாக 5 ஜிபி டேட்டா வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ கடந்த செப்டம்பர் மாதம் இலவச டேட்டா, இலவச வாய்ஸ்கால்களை அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. டிசம்பர் மாதத்துடன் முடிவடைய வேண்டிய இந்தத் திட்டம் கூடுதலாக மேலும் 3 மாதங்களுக்கு அதாவது, மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.
ஜியோவின் இந்த சேவைகளை பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே இளைஞர்கள் விலை குறைந்த 4ஜி தொழில்நுட்பம் கொண்ட செல்போன்களை வாங்கினர். இந்நிலையில் இலவச சேவைகள் இம்மாத இறுதியில் நிறைவு பெறவுள்ளதை தொடர்ந்து அந்நிறுவனம் கட்டண திட்டங்களை (டாரிஃப் ரேட்ஸ்) அறிவித்தது.

ரூ.99-க்கு ரீசார்ஜ்
ஏற்கெனவே ஜியோ கட்டண திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு ஜியோ பிரைம் எனும் புதிய திட்டத்தை சில தினங்களுக்கு முன் ஜியோ அறிவித்தது. ஜியோ பிரைம் திட்டத்திற்கு பதிவு செய்ய வாடிக்கையாளர்கள் ஒரு முறை கட்டணமாக ரூ.99-க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றும் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மார்ச் 31, 2018 வரை வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

கூடுதல் டேட்டா
ஜியோ பிரைம் திட்டத்தை பதிவு செய்ததும் மாத ரீசார்ஜ் அடிப்படையில் ஜியோ திட்டங்களை தொடர்ந்து பயன்படுத்த முடியும். இந்நிலையில் ரூ.303-க்கு ரீசார்ஜ் செய்வோருக்கு கூடுதலாக 5 ஜிபி டேட்டா வழங்குவதாக ஜியோ அறிவித்துள்ளது.

முதல் மாதத்துக்கு மட்டுமே
ஜியோ பிரைம் திட்டத்திற்கு பதிவு செய்ய மார்ச் 31, 2017 கடைசி தேதியாகும். புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் டேட்டா மூலம் நாள் ஒன்றிற்கு 1ஜிபி என்ற அளவை கடந்த பின் இன்டர்நெட் வேகம் குறையாது. எனினும் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் டேட்டா முதல் மாதத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

56 ஜிபி டேட்டா
இதே போல் ரூ.499 மற்றும் அதற்கும் மேல் ரீசார்ஜ் செய்வோருக்கு கூடுதலாக 10 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. முன்னதாக 56 ஜிபி டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும் கூடுதல் டேட்டா முதல் மாதத்திற்கு மட்டுமே வழங்கப்படும்.

பிரைம் ஜியோவில் என்னென்ன?
முதலில் ரூ.303-க்கு ஜியோ பிரைம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதில் வாடிக்கையாளர்களுக்கு தற்சமயம் வழங்கப்படும் ஜியோ புத்தாண்டு சலுகையை 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும். அந்த வகையில் தினமும் 1ஜிபி வரை அதிவேக 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ், எஸ்எம்எஸ், ஜியோ செயலி பயன்பாடு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
ஜியோவின் இலவச சேவைகளால் தங்களின் தொழில் பாதிக்கப்படுவதாக வோடஃபோன் நிறுவனம் டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications