ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி அதிமுக எம்பிக்கள் மத்திய அமைச்சரிடம் மனு
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரி அதிமுக எம்பிக்கள் அமைச்சரிடம் மனு அளித்தனர். லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் எம்பிக்கள் அமைச்சரை சந்தித்தினர்.
டெல்லி: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி இந்த பொங்கலுக்கு ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு வழி வகை செய்ய வேண்டும் என்று கோரி லோக் சபா துணை சபாநாயகர் தலைமையில் அதிமுக எம்பிக்கள் மத்திய அமைச்சர் அனில் மாதவ் தேவ்விடம் மனு அளித்துள்ளனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தியே தீர வேண்டும் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இளைஞர்கள் பேரணி நடத்தி அசத்தினார்கள். அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று கோரி போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று லோக் சபா துணை சபா நாயகர் தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்பிக்கள் மனு ஒன்றை சுற்றுச் சூழல் அமைச்சர் அனில் மாதவ் தேவ்விடம் அளித்துள்ளனர். அந்த மனுவில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தம்பிதுரை, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்வதாக பல முறை மத்திய அரசு உறுதியளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு வெற்றிகரமாக நடத்த மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று மத்திய அமைச்சர் அனில் மாதவ் உறுதியளித்தார். ஆனால், நேற்று செய்தியாளர்களின் சந்திப்பின் போது, உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு இருப்பதால், நீதிமன்ற உத்தரவு என்ன என்பதைப் பொருத்தே அடுத்தக் கட்ட நடவடிக்கையை எடுக்க முடியும் என்று அமைச்சர் அனில் மாதவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications