அத்வானிக்கு இப்ப சபாநாயகர்.. அப்புறம் ஜனாதிபதி.. இது வாஜ்பாய் விருப்பம்!
டெல்லி: லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றிபெற்றுள்ளது. இந்த நிலையில் மூத்தலைவர் அத்வானிக்கு மரியாதை கொடுக்கும் விதமாக அவருக்கு தற்போது சபாநாயகர் பொறுப்பு வழங்க வேண்டும் என்றும் பின்னர் ஜனாதிபதியாக்க வேண்டும் என்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புரோட்டோகால்படி ஜனாதிபதி, துணைஜனாதிபதி, சபாநாயகர் என்று இருப்பதால் இப்போதைக்கு சபாநாயகர் பொறுப்பு வழங்கவேண்டும் என்று முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல்பிகாரி வாஜ்பாய் கேட்டுக்கொண்டுள்ளாராம்.

தேர்தல் முடிவுகள் வெளியான உடன் இது தொடர்பாக பேசிய வாஜ்பாய், என்னுடைய ஒரே கோரிக்கை இப்போதைக்கு அத்வானியை சபாநாயகராக்கவேண்டும. பிரணாப்முகர்ஜி ஓய்வு பெற்ற உடன் அத்வானியை ஜனாதிபதியாக அமரவைக்கவேண்டும் என்பதுதான். இதை மோடிக்கு தெரிவித்து விடுங்கள் என்று கூறியுள்ளாராம்.
பிரதமர் நாற்காலியில் அமரப்போகும் மோடியும் அதை மீறமாட்டார் என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications