உ.பியில் அத்வானியின் பாஜக பேரணி திடீர் ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

Advani's UP rally postponed
ஆக்ரா: உத்தரபிரதேச மாநிலம், ஆக்ரா மாவட்டத்தில் நாளை நடைபெற இருந்த பாஜக விவசாயிகள் அணி பேரணி செப்டம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அகோலா கிராமத்தில் பாஜக விவசாயிகள் அணி பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்தது. இதனால், அதற்கான ஏற்பாடுகளை அந்தக் கட்சியினர் தீவிரமாகச் செய்து வந்தனர். இந்தப் பேரணியில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, தேசிய செயலர் வருண் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்க இருந்தனர். .

இந்த நிலையில், பேரணிக்கு வழங்கப்பட்ட அனுமதி திடீரென ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக செப்டம்பர் 29ம் தேதி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது..

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரம் மத கலவரமாக உருவெடுத்து முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் பரவியது. கலவர பீதி நீடிப்பதால் ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டுள்ளது. முசாபர்நகர் மாவட்டத்தின் 90 சதவீத பகுதிகளில் நேற்று 6 வது நாளாக ஊரடங்கு நீடித்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சட்டம்-ஒழுங்கைக் கருத்தில் கொண்டு பேரணிக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்

அகோலா கிராமத்தில் விவசாயிகள் அணி பேரணி நடத்த 8 வாரங்களுக்கு முன்னதாகவே அனுமதி பெறப்பட்டது. பேரணியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் ஒரு லட்சம் விவசாயிகள் பங்கேற்கவிருந்தனர். இந்த நிலையில், பேரணிக்கு வழங்கப்பட்ட அனுமதியை மாவட்ட நிர்வாகம் திடீரென ரத்து செய்துள்ளது அந்தக் கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம், கருத்து சுதந்திரத்தை அந்த மாநில அரசு நசுக்க முயற்சிக்கிறது என்று பாஜக கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+