அப்பீல் வழக்கு: ஜெ. தரப்பு வாதத்துக்கு பதிலளிக்க 2 நாட்கள் மட்டும் அவகாசம் கோரும் கர்நாடகா
டெல்லி: அப்பீல் வழக்கில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரின் இறுதிவாதத்துக்கு பதிலளிக்க கர்நாடகா அரசுத் தரப்பு 2 நாட்கள் அவகாசம் கேட்கக் கூடும் என தெரிகிறது.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் கர்நாடக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, பிவி ஆச்சார்யா ஆகியோர் இறுதிவாதங்களை முன்வைத்துள்ளனர். நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் பெஞ்ச் முன்னிலையில் நடைபெறும் இந்த விசாரணையின் வழக்கின் புகார்தாரர் என்ற அடிப்படையில் சுப்பிரமணியன் சுவாமியும் இறுதிவாதத்தை முன்வைத்திருக்கிறார்.

திமுக பொதுச்செயலர் அன்பழகனும் தமது தரப்பு வாதத்தை எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்திருக்கிறார். இதைத் தொடர்ந்து தற்போது ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் வாதாடி வருகிறார். வரும் செவ்வாய்க்கிழமையன்று மீண்டும் அவர் வாதத்தை தொடங்கி வியாழக்கிழமையன்று நிறைவு செய்ய வாய்ப்புள்ளது.
ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் தமது வாதங்களை நிறைவு செய்த பின்ன அதற்கு பதிலளிக்க கர்நாடகா அரசு தரப்பு 2 நாட்கள் கால அவகாசம் கேட்கக் கூடும் என தெரிகிறது.
இது தொடர்பாக ஒன் இந்தியாவிடம் பேசிய கர்நாடகா சட்டத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்த பின்னர் அதில் எழும் சந்தேகங்களை சுட்டிக்காட்டி பதில் மனுத்தாக்கல் செய்வோம். இதற்காக 2 நாட்கள் மட்டும் அவகாசம் கேட்கப்படும் என்றன.
மேலும் இவ்வழக்கில் கர்நாடகா அரசு மேல்முறையிட்டு மனுவை தாக்கல் செய்ய உரிமை இல்லை என்றும் ஜெயலலிதா தரப்பு மனுத்தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு அதிக நாட்கள் ஆகாது. இது மிகவும் முக்கியமான பிரச்சனையாக இருந்திருந்தால் முதலிலேயே விசாரிக்கப்பட்டிருக்கும். தற்போது அனைத்து தரப்பும் வாதங்களை முன்வைக்க அனுமதித்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு நீண்ட நாட்கள் அவசியம் இல்லை என்றும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications