அப்பீல் வழக்கு: ஜெ. தரப்பு வாதத்துக்கு பதிலளிக்க 2 நாட்கள் மட்டும் அவகாசம் கோரும் கர்நாடகா
டெல்லி: அப்பீல் வழக்கில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரின் இறுதிவாதத்துக்கு பதிலளிக்க கர்நாடகா அரசுத் தரப்பு 2 நாட்கள் அவகாசம் கேட்கக் கூடும் என தெரிகிறது.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் கர்நாடக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, பிவி ஆச்சார்யா ஆகியோர் இறுதிவாதங்களை முன்வைத்துள்ளனர். நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் பெஞ்ச் முன்னிலையில் நடைபெறும் இந்த விசாரணையின் வழக்கின் புகார்தாரர் என்ற அடிப்படையில் சுப்பிரமணியன் சுவாமியும் இறுதிவாதத்தை முன்வைத்திருக்கிறார்.

திமுக பொதுச்செயலர் அன்பழகனும் தமது தரப்பு வாதத்தை எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்திருக்கிறார். இதைத் தொடர்ந்து தற்போது ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் வாதாடி வருகிறார். வரும் செவ்வாய்க்கிழமையன்று மீண்டும் அவர் வாதத்தை தொடங்கி வியாழக்கிழமையன்று நிறைவு செய்ய வாய்ப்புள்ளது.
ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் தமது வாதங்களை நிறைவு செய்த பின்ன அதற்கு பதிலளிக்க கர்நாடகா அரசு தரப்பு 2 நாட்கள் கால அவகாசம் கேட்கக் கூடும் என தெரிகிறது.
இது தொடர்பாக ஒன் இந்தியாவிடம் பேசிய கர்நாடகா சட்டத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்த பின்னர் அதில் எழும் சந்தேகங்களை சுட்டிக்காட்டி பதில் மனுத்தாக்கல் செய்வோம். இதற்காக 2 நாட்கள் மட்டும் அவகாசம் கேட்கப்படும் என்றன.
மேலும் இவ்வழக்கில் கர்நாடகா அரசு மேல்முறையிட்டு மனுவை தாக்கல் செய்ய உரிமை இல்லை என்றும் ஜெயலலிதா தரப்பு மனுத்தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு அதிக நாட்கள் ஆகாது. இது மிகவும் முக்கியமான பிரச்சனையாக இருந்திருந்தால் முதலிலேயே விசாரிக்கப்பட்டிருக்கும். தற்போது அனைத்து தரப்பும் வாதங்களை முன்வைக்க அனுமதித்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு நீண்ட நாட்கள் அவசியம் இல்லை என்றும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications