ஹலோ சார்.. செல்பி ரெம்ப பழைய்ய்யய டிரெண்ட்.. இப்போ ‘கவ்பி’தான் லேட்டஸ்ட், தெரியுமா?
கொல்கத்தா: பசுக்களை பாதுகாக்கவும், பசு வதையை தடுக்கவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பசுவுடன் செல்பி எடுக்கும் போட்டியை கொல்கத்தாவைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று நடத்தியுள்ளது.
மாட்டிறைச்சி விவகாரம் கடந்த ஆண்டு நாட்டில் பெரும் சர்ச்சைக்குரிய சம்பவங்களுக்கு காரணமாக அமைந்தது.
இந்நிலையில், வருங்காலத்தில் பசுக்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கவ்பி என்ற பெயரில் போட்டி ஒன்றை தொண்டு நிறுவனம் இணையத்தில் நடத்தியுள்ளது.

கவ்பி...
கொல்கத்தாவைச் சேர்ந்த 'கோ சேவா பரிவார்' என்றதொண்டு நிறுவனம் இந்த போட்டியை நடத்தியுள்ளது. இதற்கு 'பசுவுடன் செல்பி' எனப் பொருள் படும் வகையில் கவ்பி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பசுவுடன் செல்பி...
இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களது செல்போனில் பசுக்களுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அவற்றை இணையம் வாயிலாக அந்த தொண்டு நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப் பட்டது.

பேஸ்புக் பக்கத்தில்...
இவ்வாறு அனுப்பப்பட்ட புகைப்படங்களை அந்த தொண்டு நிறுவனம், தன் 'பேஸ்புக்' வலைத்தள பக்கத்தில், 'பசுவைபாதுகாப்போம், பசுவை வணங்குவோம்' என்ற பெயரில் வெளியிட்டு வருகிறது.

விதவிதமான கவ்பிக்கள்...
ஏற்கனவே செல்பி மோகம் தலை விரித்தாடும் நிலையில், இந்தப் போட்டியால் பசுவுக்கு முத்தம் கொடுப்பது போலவும், பசுவை வணங்குவது போலவும் என விதவிதமாக மக்கள் கவ்பி எடுத்து அனுப்பி வருகின்றனர்.

மருத்துவ குணம்...
பசு பாதுகாப்பு குறித்து சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவன நிர்வாகி ஒருவர் கூறுகையில், "பசு பாதுகாப்பு என்பது மதம் அல்லது அரசியல் சம்பந்தப்பட்டதல்ல. பசுவிடமிருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களும், மருத்துவ குணம் கொண்டவை.

விழிப்புணர்வு...
பசு இறைச்சியை சாப்பிடுவதால் கிடைக்கும் பலனை விட, அதனிடமிருந்து கிடைக்கும் பொருட்களால் அதிக பலன் கிடைக்கிறது என்ற விழிப்புணர்வை, மக்களிடம் ஏற்படுத்தவே இந்தப் போட்டியை நடத்தினோம்" எனத் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications