தெலுங்கானாவில் பாதயாத்திரையை 'கட்' செய்தார் ராகுல்- கிராமங்களை நோக்கி காரில் "படையெடுப்பு"
ஹைதராபாத்: தெலுங்கானாவில் விவசாயிகளை சந்திக்க பாதயாத்திரை மேற்கொள்வதாக திட்டமிட்டிருந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடைசி நேரத்தில் அதனை ரத்து செய்தார். பின்னர் காரிலேயே சென்று விவசாயிகளை சந்தித்து வருகிறார்.
விவசாயிகளின் பிரச்னைகள் தொடர்பாக மத்திய அரசை தீவிரமாக எதிர்த்து வரும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இந்தப் பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி தெலுங்கானாவில் 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு இன்று நடை பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது.

இதற்காக அவர் இன்று தெலுங்கானா சென்றடைந்தார். மகாராஷ்டிரத்தில் இருந்து அடிலாபாத் மாவட்டத்தின் நிர்மல் நகருக்கு ராகுல் காந்தி சென்றார். அங்கிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு அவர் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.
ஆனால் அளவுக்கு அதிகமாக கூட்டம் ராகுலை சூழ்ந்ததால் பாதயாத்திரையை அவர் ரத்து செய்துவிட்டு காரில் கிராமங்களுக்கு சென்று விவசாயிகளை சந்தித்து வருகிறார்.
இந்த சந்திப்ப்புக்குப் பின்னர் கொரடிகால் கிராமத்தில் மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் விவசாயிகளிடையே ராகுல் உரையாற்றவுள்ளார்.
பின்னர், ஹைதராபாத்தில் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களையும், காங்கிரஸ் கட்சியினரையும் ராகுல் சந்தித்துப் பேசுகிறார்.












Click it and Unblock the Notifications