ஜாலி கேர்ள் ப்ரியா போய் தற்கொலையா?, நம்பவே முடியல: எய்ம்ஸ் டாக்டர்கள் அதிர்ச்சி
டெல்லி: ப்ரியா வேதி தற்கொலை செய்து கொண்டார் என்பதை நம்பவே முடியவில்லை என அவருடன் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் ப்ரியா வேதி(31) தனது ஓரினச்சேர்க்கையாளர் கணவர் டாக்டர் கமல் வேதியின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் ப்ரியா பற்றி எய்ம்ஸ் மருத்துவர்கள் கூறுகையில்,

ப்ரியா
ப்ரியா சாதாரணமாகத் தான் இருந்தார். அவர் எந்தவித மன வேதனையில் இருந்ததாகத் தெரியவில்லை. அவர் மன உளைச்சலில் இருந்ததற்கான அறிகுறியே இல்லை என்று மூத்த டாக்டர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கவலையா?
நான் ப்ரியாவுடன் பல நாட்கள் பணியாற்றியுள்ளேன். அவருடன் நிறைய பேசியுள்ளேன். நானும், அவரும் ஆபரேஷன் தியேட்டர் பணியில் பலமுறை இருந்தபோது நிறைய பேசியுள்ளோம். ஆனால் அப்போது எல்லாம் அவர் தனது மனதில் இருந்த எதையும் தெரிவிக்கவில்லை. இன்னொரு டாக்டருக்கு விவாகரத்து ஆனது. அவர் தான் அது பற்றி பேசியுள்ளார். ப்ரியா தனது திருமண வாழ்க்கை பற்றி எதுவுமே கூறியது இல்லை என்கிறார் மற்றொரு மருத்துவர்.

ஜோக்
ப்ரியா தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி குறை கூறியது இல்லை. சொல்லப் போனால் ஆபரேஷன் தியேட்டரில் அவர் தான் அதிகமாக ஜோக்கடித்துக் கொண்டிருப்பார் என்று அவருடன் பணிபுரிந்த டாக்டர் ஒருவர் கூறியுள்ளார்.

அறிவாளி
ப்ரியா அழகான, அறிவான பெண். அவர் எய்ம்ஸில் படிக்காவிட்டாலும் நல்ல அறிவாளி. அவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியை கேட்டு நாங்கள் எல்லாம் அதிர்ச்சி அடைந்தோம் என ஒரு மருத்துவர் தெரிவித்துள்ளார்.

திருமணம்
ப்ரியா எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் டாக்டர்களுக்கான குடியிருப்பில் கணவருடன் வசித்து வந்தார். அவருக்கும், கமலுக்கும் இடையே எந்த பிரச்சனையும் இருந்ததாக தங்களுக்கு தெரியவில்லை என்கிறார்கள் அக்கம்பக்கத்தில் வசிக்கும் டாக்டர்கள்.












Click it and Unblock the Notifications