எல்லாம் அறிக்கையில் இருக்கிறது.. திரும்ப, திரும்ப அதையே சொன்ன தமிழக சுகாதாரத்துறை செயலாளர்
டெல்லி: தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் டெல்லியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: மாநில அரசின் கோரிக்கை அடிப்படையில் எய்ம்ஸ் நிபுணர்கள் அப்பல்லோ வருகை தந்தனர். அதுகுறித்த விவரத்தை தற்போது மாநில அரசு கேட்டுக்கொண்டது. எனவே அறிக்கையை கொடுத்துள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு உலக தரம் வாய்ந்த சிகிச்சை வழங்கப்பட்டதாக எய்ம்ஸ் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எய்ம்ஸ் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
(ஜெ. சிகிச்சை: தமிழக அரசு வெளியிட்ட அப்பல்லோ மருத்துமனை. எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கைகள்)

எய்ம்ஸ் அறிக்கையில் ஒரு சிறு திருத்தத்தையும் தமிழக அரசு செய்யவில்லை. இந்த நேரத்தில் அறிக்கையை வெளியிடுவதற்கு பின்புலம் எதுவும் கிடையாது. தேவையின் அடிப்படையில் வெளிநாட்டு நிபுணர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.
ஏற்கனவே தமிழக அரசு ஹைகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ள அம்சங்கள்தான் எய்ம்ஸ், அப்பல்லோ அறிக்கைகளிலும் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிருபர்கள் கேட்ட கேள்விக்கெல்லாம் அறிக்கையில் பதில் உள்ளது என்று மட்டுமே அவர் தெரிவித்தார். பதில் அளிக்கவில்லை. மேலும், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அரசு சுகாதாரத்துறை சார்பில் ஒரு பதிலை கூட கூறவில்லை. அறிக்கையையும் வெளியிடவில்லை. ஆனால் இப்போது திடீரென அறிக்கை வெளியிட்டதோடு சரியாக பதிலும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications