ராஜா ஸ்தானத்தில் சனி... சந்திரனால் விபரீதக் காற்று... ‘மன்மத நாம’ ஆண்டில் மழை குறையுமாம்!
நகரி : தெலுங்கு வருடமான மன்மத நாம ஆண்டில் மழை குறைவாக இருக்கும் என பஞ்சாங்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கு புது வருடப் பிறப்பான யுகாதி திருநாள் நேற்று கொண்டாடப்பட்டது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசு சார்பில் யுகாதி விழா கொண்டாடப்பட்டது.
ஹைதராபாத் ரவிந்திரபாரத் ஆடிட்டோரியத்தில் தெலுங்கானா அரசு சார்பில் நடைபெற்ற யுகாதி திருநாள் கொண்டாட்டத்தில், புதிய ஆண்டான ‘மன்மத நாம' வருட பஞ்சாங்கம் படிக்கப்பட்டது. பஞ்சாங்க நிபுணர் யாயவரம் சந்திரசேகர சித்தாந்தி இந்தப் புதிய பஞ்சாங்கத்தைப் படித்தார்.

அப்போது இந்த ஆண்டு தெலுங்கானாவில் மழை குறைவாக இருக்கும் என்றும் வருண ஜெபம், ருத்ரயாகம் போன்ற பூஜைகள் நடத்தி வருண பகவானை வழிபட்டால் பலன் பெறலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், ராஜா ஸ்தானத்தில் சனி இருப்பதால் மழை குறைவாக இருக்கும் என்றும், மேகத்தின் அதிபதியான சந்திரனால் விபரீத காற்று ஏற்படும் என்றும் இதனால் பயிர் நாசம் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
ஆனால், மழை வேண்டி யாகம் நடத்தினால் உரிய பலன் கிடைக்கும் என்றும் சந்திரசேகர சித்தாந்தி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications