இரவில் தூங்க முடியாதாம். ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் தப்பிய ஒருவருக்கும் புது பிரச்சனை! சோகம்
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் பலியாகினர். ஒருவர் மட்டுமே அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். இப்படி உயிர் தப்பிய அவர் விமான விபத்து நடந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் வேறு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சோகமான தகவல் வெளியாகி உள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் கடந்த மாதம் மதியம் 1:39 மணிக்கு லண்டனுக்கு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட அடுத்த ஒரு நிமிடத்தில் விபத்தில் சிக்கியது.

விமான நிலையத்தின் அருகே உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. விமானத்தில் 230 பயணிகள் மற்றும் பைலட்டுகள் உள்பட 12 பணியாளர்கள் என்று மொத்தம் 242 பேர் பயணம் செய்தனர். இதில் 241 பேர் பலியாகினர். இதுதவிர விடுதியில் இருந்தவர்கள் உள்பட மேலும் 19 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் மொத்த உலகத்தையும் உலுக்கியது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். அவரது பெயர் விஸ்வாஸ் குமார் ரமேஷ். அவருக்கு வயது 40. விமானத்தில் அவசர வழியின் அருகே உள்ள 11 ஏ சீட்டில் இருந்த நிலையில் உயிர் தப்பினார். இவர் நம் நாட்டின் ஒருபகுதியாக இருக்கும் டையூவை சேர்ந்தவர். தற்போது பிரிட்டன் குடியுரிமை பெற்றுள்ளார்.
இவர் தனது சகோதரர் அஜய் உடன் டையூவிற்கு வந்து உறவினர்களை சந்தித்தார். அதன்பிறகு மீண்டும் லண்டன் புறப்பட்டு சென்றபோது தான் விமானம் விபத்தில் சிக்கியது. இதில் அஜய் இறந்த நிலையில் விஸ்வாஸ் குமார் ரமேஷ் மட்டும் உயிர் தப்பி உள்ளார்.
இந்நிலையில் தான் விஸ்வாஸ் குமார் ரமேஷ் தற்போது டையூவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். அவருடன் உறவினர் சன்னி இருக்கிறார். இந்நிலையில் தான் விஸ்வாஸ் குமார் ரமேஷ் புதிய பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சன்னி கூறியுள்ளார். இதுபற்றி சன்னி கூறுகையில், ‛‛வெளிநாடுகளில் எங்களின் உறவினர்கள் உள்ளனர். அவர்களில் பலரும் விஸ்வாஸ் உடல்நலம் குறித்த கேட்கின்றனர். ஆனால் அவர் யாரிடமும் பேசவில்லை. சில வேளைகளில் அவர் பேசினாலும் திடீரென்று அதிர்ச்சியில் உறைந்து விடுகிறார். அவரிடம் இருந்து பேச்சு வராமல் ஆகிவிடுகிறது.
விபத்து தொடர்பான அதிர்ச்சியில் இருந்தும், அவரது சகோதரர் அஜய் (விமானத்தில் உடன் பயணித்தவர்) இறந்தது உள்ளிட்டவற்றில் இருந்து விஸ்வாஸ் மீளவில்லை. விமான விபத்து நடந்த இடம், அவரது சகோதரர் அஜய் இறந்தது உள்ளிட்டவை தொடர்ந்து அவர் மனதில் தங்கி உள்ளது. இரவில் தூங்கும்போது திடீரென்று அவ்வப்போது எழுந்திருக்கிறார். அதன்பிறகு மீண்டும் தூங்குவதற்கு மிகவும் சிரமப்படுகிறார். 2 நாட்களுக்கு முன்பு மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றோம். மீண்டும் லண்டன் செல்வது தொடர்பாக இப்போது எந்த திட்டமும் அவரிடம் இல்லை. இப்போது தான் அவருக்கான சிகிச்சைகள் தொடங்கி உள்ளன'' என்றார். விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக தப்பிய விஸ்வாஸ் குமார் ரமேஷ் தற்போது மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அதரி்ச்சியில் இருந்து அவரை மீட்க தேவையான சிகிச்சைகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறார்.
முன்னதாக விஸ்வாஸ் குமார் ரமேஷ் காயங்களுடன் உயிர் தப்பினார். இதையடுத்து அவர் அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன்பிறகு கடந்த மாதம் 17 ம் தேதி அவர் டிஸ்சார்ஜ் ஆனார். அன்றைய தினம் சகோதரர் அஜயின் உடல் அடையாளம் காணப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அஜயின் உடலை தோளில் சுமந்து இறுதி சடங்குகளை விஸ்வாஸ் குமார் ரமேஷ் செய்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications