ஷாப்பிங் போய்ட்டு சாவகாசமாக வந்த ரேணுகா... லேட்டாக புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா!
டெல்லி: காங்கிரஸ் பெண் எம்.பி. ஒருவர் ஷாப்பிங் சென்று விட்டு தாமதமாக திரும்பியதால், ஏர் இந்தியா விமானம் தாமதமாக புறப்பட்டு சென்ற சம்பவத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ரேணுகா சவுத்ரி. இவர் தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று, அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருந்து டெல்லி வழியாக ஹைதராபாத் நகருக்கு செல்லும் ஏர்இந்தியா விமானத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்தார் ரேணுகா.

விமானம் மாலை 7 மணியளவில் புறப்படுவதற்கு தயாராக இருந்தது. விமானத்தில் அவரது உடமைகள் அனைத்தும் ஏற்றப்பட்டு விட்ட நிலையில் ரேணுகா சவுத்ரி மட்டும் வரவில்லை. பின்னர் விமான பயணிகளுக்கான இறுதி அழைப்பும் விடுக்கப்பட்டது. ஆனால் ரேணுகா சவுத்ரி மட்டும் விமானத்தில் ஏறவில்லை.
அதனைத் தொடர்ந்து விமானத்தில் இருந்த அவரது உடமைகளை உடனடியாக இறக்கிவிட முடியாது என்ற நிலையில், ரேணுகா சவுத்ரியின் பெயரை விமான நிலைய பணியாளர்கள் பலமுறை மீண்டும், மீண்டும் அழைத்தனர். ஆனால், தொடர்ந்து அவர் வராததால், விமானம் புறப்படவில்லை.
இறுதியாக ஷாப்பிங் செய்த களைப்புடன் ரேணுகா, விமான நிலையத்துக்குள் நுழைந்தார். இதற்கிடையில், விமானம் புறப்படுவதற்கு அளிக்கப்பட்ட நேரம் கடந்து விட்டது. எனவே, மீண்டும் புதிய அறிவிப்பு வரும்வரை விமானி காத்திருக்க வேண்டியதாகி விட்டது. இதனால், விமானம் அன்று சுமார் 45 நிமிடம் தாமதமாக புறப்பட்டது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இது தொடர்பாக ஏர் இந்தியா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதனை மறுத்துள்ள ரேணுகா சவுத்ரி, ‘நான் ஷாப்பிங் சென்றதால்தான் விமானம் தாமதமாக புறப்பட்டது என்று கூறுபவர்கள், இதை நிரூபிக்க முடியுமா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications