அதெப்படி எனக்கு 'அழுக்கு மாஸ்க்' தரலாம்? விமானியின் பிடிவாதத்தால் ஏர் இந்தியா 3 மணி நேரம் தாமதம்!!
டெல்லியில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு ஏர் இந்தியா விமானம் நேற்று முன்தினம் அதிகாலை புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமானத்தின் காக்பிட்டில் விமானிக்கு அவசரகால ஆக்ஸிஜன் மாஸ்க் வழங்கப்பட்டது.
அந்த மாஸ் 'அழுக்காக' இருப்பதாகக் கூறி அதை ஏற்க விமானி மறுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து ஏர் இந்தியா விமான அதிகாரிகள் விமானியை சமாதானப்படுத்த முயற்சித்தனர்.

ஆனால் விமானி தமக்கு அழுக்கு இல்லாத மாஸ்க்தான் வேண்டும் என்று பிடிவாதம் செய்தார். இதனால் விமானம் அங்கு இருந்து புறப்படுவதற்கு சுமார் 3 மணிநேரம் கால தாமதம் ஆகி உள்ளது.
இதன்காரணமாக இந்த மார்க்கத்தில் பயணம் செய்யும் பிற விமானங்களின் சேவையும் பாதிக்கப்பட்டது. இதேபோல அர்த்தமற்ற காரணங்களுக்காக அந்த விமானி இதற்கு முன்னரும் விமானத்தை தாமதமாக இயக்கியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக விமான நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications