இந்திய முக்கிய நகரங்களுக்கு அல் கொய்தா இலக்கு: பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் எச்சரிக்கை!
டெல்லி: டெல்லி, மும்பை போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களில் அல் கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
தீவிரவாத அமைப்பான அல் கொய்தா பாகிஸ்தானில் தங்களது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளித்துவருகிறது. அத்துடன் அங்கு நிலையற்ற அரசியல் சூழலை உருவாக்கவும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் தாக்குதல் நடத்தும் பலத்தை இழந்துவிட்டது அல் கொய்தா. அதே நேரத்தில் அந்த இயக்கத்தின் கவனம் இந்தியா மீது திருப்பக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக இந்தியாவின் டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் அல் கொய்தா தாக்குதல் நடத்தும் சாத்தியங்கள் இருப்பதாகவும் அதனால் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் என்றும் இந்தியாவுக்கு பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications