மும்பையில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக கருகலைப்புகள்
மும்பை: மும்பையில் கருக்கலைப்பு சதவிகிதம் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.
மும்பையில் உள்ள தனியார் மற்றும் பொது மருத்தவமனைகளில் 2013ம் ஆண்டு முதல் தற்போது வரை நடந்துள்ள கருக்கலைப்பு குறித்த தகவல்களை மும்பை மாநகராட்சி நிர்வாகம் சேகரித்துள்ளது.
அந்த தகவலின் விவரங்களை பார்ப்போம்.

கருக்கலைப்பு
மும்பையில் ஒரு ஆண்டில் மட்டும் 30 ஆயிரத்து 117 கருகலைப்பு நடந்துள்ளது. கடந்த 2013-2014ம் ஆண்டில் மும்பையில் 10 சதவிதிகம் கூடுதல் கருக்கலைப்பு நடந்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக அளவில் கருக்கலைப்பு நடந்துள்ளது.

ஆணா, பெண்ணா
கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை தெரிந்து கொண்ட பிறகு நடக்கும் கருக்கலைப்புகள் தான் அதிகமாம். இத்தகைய கருக்கலைப்புகள் 11 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

பாலினம்
கருக்கலைப்புகளில் கருவில் இருப்பது பெண் என்று தெரிந்து கொண்டு செய்யப்படுவது தான் அதிகம் என்று கூறப்படுகிறது.

பெண்கள்
கருவில் இருப்பது பெண் குழந்தை என்பதால் அல்லது வேறு எதற்காக கருக்கலைப்பு செய்யப்படுகிறது என்று அவர்களிடம் கேள்விகள் கேட்டால் பெண்கள் யாரிடமாவது சென்று பாதுகாப்பு இல்லாமல் கருக்கலைப்பு செய்து கொள்வார்கள் என்று மருத்துவர் மங்கள் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications