கணக்கு எடுத்த காமர்ஸ் டீச்சர்.. ஒட்டு மொத்த பள்ளியே ஃபெயிலாமே! அட இது என்னங்க கொடுமையா இருக்கு!
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் இரண்டு பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுமே ஒட்டுமொத்தமாக தோல்வியடைந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனையடுத்து பள்ளிக் கல்வித்துறை உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் பர்வாணி மாவட்டத்தில் உள்ள இரண்டு அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய 120 மாணவர்கள் ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் குறைபாடு காரணமாகவே மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்திருக்கிறது.
மாணவர்கள் தோல்வி: குறிப்பாக வணிகவியல் ஆசிரியர், மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித பாடத்தை கற்பித்ததாகவும் இடைநிலை ஆசிரியர்கள் உயர்நிலை அறிவியல் மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்த அதிர்ச்சி தகவலும் வெளியாகியிருக்கிறது. இந்த இரண்டு பள்ளிகளுமே இந்தூரில் இருந்து சுமார் 220 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது . மகாராஷ்டிரா எல்லைக்கு அருகே பர்மாணி மாவட்டத்தில் உள்ள பன்செமல் தொகுதியில் இந்த பள்ளிகள் அமைந்திருக்கின்றன.
அதிர்ச்சி சம்பவம்: மால்ஃபா அரசு பள்ளியில் கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் 85 மாணவர்கள் இந்த தேர்வுகளை எழுதினர். அதில் அனைவருமே ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்திருக்கின்றனர். பெரும் அதிர்ச்சி தந்த இந்த சம்பவத்தையடுத்து பள்ளியின் ஒட்டுமொத்த ஊழியர்களும் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதேபோல பிப்ரானி அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் 41 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
காமர்ஸ் டீச்சர்: இடைநிலை ஆசிரியர் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த பள்ளியில் அனைவருமே தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டது. அந்த பகுதி கல்வி அதிகாரியான அருண் மிஸ்ரா மால்ஃபா பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் அதிர்ச்சி தரும் இந்த தோல்விக்கு பள்ளியின் முதல்வரான அலோக் சிசோடியாவே காரணம் எனவும் அவர் மாணவர்களுக்கு தகுதியான ஆசிரியர்களை கற்பிக்க அனுமதிக்கவில்லை என்றும் பனிரெண்டாம் வகுப்பு உயிரியல் மற்றும் வேதியியல் பாடங்களை கற்பிக்க இரண்டாம் நிலை ஆசிரியரும் கணிதம் கற்பிக்க வணிகவியல் ஆசிரியரும் நியமனம் செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்ததாக கூறினார்.
வசதிகள் இல்லை: மேலும் 12 ஆம் வகுப்பு வேதியலுக்கான கெஸ்ட் ஆசிரியர் நியமிக்கப்படவில்லை எனவும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் கற்பிக்க ஒரு வணிக ஆசிரியரை எப்படி நியமனம் செய்ய முடியும் என கோபமாக கேள்வி எழுப்பினார். கடந்த ஆண்டு மாணவர்கள் தேர்ச்சி நன்றாக இருந்த நிலையில் இந்த முறை தோற்றதற்கு நான் எப்படி பொறுப்பாக என முதல்வர் தன்னிடம் கேட்டதாக மிஸ்ரா கூறியதோடு கலைப்பிரிவு மாணவர்கள் ஏன் தோல்வியடைந்தார்கள் எனக் கேட்டதற்கு மாணவர்களுக்கு சரியான வசதிகள் இல்லை அவர்களுக்கு எழுத கூட தெரியாது என்றார்.
விசாரணை அறிக்கை: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் 75 மாணவர்களில் 5 பேர் மட்டுமே பத்தாம் வகுப்பு பொதுத்தேரில் தேர்ச்சி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியரும் ஒட்டுமொத்த ஊழியர்களும் நீக்கப்பட்டுள்ள நிலையில் பர்மாணி பழங்குடியினர் நலத்துறை உதவி கமிஷனர் மற்றும் துணை கமிஷனருக்கு விசாரணை அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது எனவும் கடுமையான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் பிப்ரானி உயர்நிலைப்பள்ளி ஊழியர்கள் மீதும் இதே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்
பெற்றோர்கள் போராட்டம்: பிப்ரானி பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த 41 மாணவர்களும் தோல்வியடைந்த நிலையில் , அந்த தொகுதியில் 5 பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் வெறும் இரண்டு முதல் ஐந்து சதவீதம் வரை மட்டுமே இருக்கிறது. இதை அடுத்து கோபமடைந்த பெற்றோர்கள் மால்ஃபா பள்ளியில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய பெற்றோர்கள், பூஜ்ஜிய சதவீத முடிவு வெட்கக்கேடானது எனவும் இது மாணவர்களின் தவறல்ல ஆசிரியர்களின் தவறு என கூறினர்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications