தாத்ரி சம்பவத்தில் பா.ஜ.க. தலைவர் மகன் உட்பட 10 கொலையாளிகள் கைது!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக வதந்தியை கிளப்பி முஸ்லிம் முதியவர் இக்லாலை அடித்தே படுகொலை செய்ததாக பா.ஜ.க. தலைவர் மகன் உட்பட 10 கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த படுகொலையில் தொடர்புடைய கடைசி கொலையாளியை நேற்று போலீசார் கைது செய்தனர்.
தாத்ரி மாவட்டத்தில் மாட்டிறைச்சியை முஸ்லிம் முதியவர் இக்லால் தமது வீட்டில் வைத்திருப்பதாக கடந்த மாதம் 28-ந் தேதி ஒரு கும்பல் வதந்தியை கிளப்பிவிட்டது. இதனைத் தொடர்ந்து இக்லால் வீட்டுக்குள் நுழைந்த மதவெறியர்கள் அவரையும் அவரது மகனையும் கண்மூடித்தனமாக தாக்கினர்.

இதில் இக்லால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை இந்த சம்பவம் ஏற்படுத்தியது.
இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய உள்ளூர் பா.ஜ.க. தலைவர் மகன் விஷால் உட்பட 10 கொலையாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த தாத்ரி காவல்துறை அதிகாரி அனுராக் சிங், இக்லால் படுகொலையில் 10 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர்களில் 9 பேர் ஏற்கனவே அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுவிட்டனர்.
கடைசி கொலையாளி ஹரி ஓம், மேற்கு உத்தரப்பிரதேசத்தின் சாரதானா நகரில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த போது ஞாயிற்றுக்கிழமையன்று பிடிபட்டார். மொத்தம் 10 கொலையாளிகளையும் நாங்கள் கைது செய்துள்ளோம் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications