ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரை தொடங்கியது
ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை தொடங்கியது.
Recommended Video
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் இன்று அமர்நாத் யாத்திரை தொடங்கியது. அம்மாநில தலைமை செயலாளர் பிவிஆர் சுப்பிரமணியம் யாத்திரையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஆளுநருக்கான ஆலோசகர்கள் வியாஸ், விஜயகுமார் பங்கேற்றனர்.
அமர்நாத் குகை கோவில் பனிலிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் ஜம்மு காஷ்மீர் வருகை தருகின்றனர். இந்த யாத்திரை மொத்தம் 40 நாட்கள் நடைபெறும்.
பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அச்சத்துக்கு மத்தியில்தான் அமர்நாத் யாத்திரை நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு அமர்நாத் பக்தர்களின் பேருந்தை பயங்கரவாதிகள் தாக்கியதில் 7 பேர் பலியாகி இருந்தனர்.
இந்த ஆண்டு யாத்திரை பல்தல் அடிவார முகாம்களில் இருந்து தொடங்கியது. ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சுப்பிரமணியம் யாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகர்கள் வியாஸ், விஜயகுமார் பங்கேற்றனர்.
First batch of Amarnath Yatra has been flagged off from Jammu base camp. It was flagged off today by BVR Subramanyam, Chief secretary J&K, BB Vyas Advisor to J&K Governor & Vijay Kumar, Advisor to J&K Governor. pic.twitter.com/djW5DdSX7f
— ANI (@ANI) June 26, 2018
அமர்நாத் யாத்திரை பாதுகாப்பாக நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் முழு வீச்சில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சர்வதேச எல்லைப் பகுதிகளில் ராணுவ வீரர்கள் அதிதீவிர கண்காணிப்பில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.