அம்பேத்கர் பேரன் மீது சிவசேனா கொலைவெறித் தாக்குதல்- உயிர் தப்பினார்!!
மும்பை: சட்டமேதை அம்பேத்கரின் பேரனும் குடியரசு சேனாவின் தலைவருமான ஆனந்தராஜ் அம்பேத்கர் மீது சிவசேனா கட்சியினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் ஆனந்தராஜ் அம்பேத்கர் காயமின்றி உயிர்தப்பியுள்ளார்.
மும்பை தாதரில் அம்பேத்கருக்கு நினைவிடம் கட்ட வேண்டும் என ஆனந்தராஜ் அம்பேத்கர் போராடி வருகிறார். இதற்கு சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் கல்லூரி ஒன்றுக்குள் முதல்வரை சந்திக்க ஆனந்தராஜ் சென்று கொண்டிருந்தார். அப்போது கல்லூரி வளாகத்துக்குள் ஆயுதம் தாங்கிய வன்முறை கும்பல் ஆனந்தராஜ் அம்பேத்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தியது.
இதில் ஆனந்தராஜின் ஆதரவாளர் ஒருவர் படுகாயமடைந்தார். ஆனந்தராஜ் உள்ளிட்டோர் காயமின்றி உயிர் தப்பினர். இத்தாக்குதலை உள்ளூர் சிவசேனாவினரே நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications