டெல்லியில் உண்ணாவிரதம்... சந்திரபாபு நாயுடு குண்டுக்கட்டாக அகற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதி!

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் உள்ள ஆந்திர பவன் முன்பாக கடந்த 7-ந் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
5-வது நாளாக நேற்று உண்ணாவிரதத்தை அவர் தொடர்ந்தார். ஆனால் அவரது உடல் நிலை மோசமானது. இதையடுத்து அவரை அங்கிருந்து அகற்றி மருத்துவமனையில் சேர்க்க டெல்லி போலீசார் முடிவு எடுத்தனர்.
50 பேரைக் கொண்ட போலீஸ் படை ஆம்புலன்ஸ் சகிதம் ஆந்திர பவனுக்கு நேற்று பகல் 3 மணிக்கு விரைந்தது. அங்கிருந்து சந்திரபாபு நாயுடுவை அகற்ற தெலுங்குதேசம் தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் சந்திரபாபு நாயுடுவை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி ஆம்புலன்ஸி கொண்டு சென்றனர். அவர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications