‛‛என்னோட அப்பாவ காணல’’.. கைக்கூப்பி போலீசிடம் கதறிஅழுத சிறுவன்.. சபரிமலை கூட்ட நெரிசலில் உருக்கம்
சபரிமலை: ஐயப்பன் கோவிலுக்கு தற்போது அதிகளவு பக்தர்கள் செல்வதால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் கூட்ட நெரிசலில் காணாமல் போன அப்பாவை கண்டுபிடித்து தரும்படி சிறுவன் ஒருவன் போலீஸ்காரரிடம் கைக்கூப்பி கண்ணீர் விட்டு கதறிய சம்பவம் அனைவரையும் உருக்கி உள்ளது.
கார்த்திகை மாதம் தொடங்கியுடன் சபரிமலை பக்தர்கள் மாலை அணிந்து ஐயப்பனுக்கு விரதம் தொடங்கி உள்ளனர். தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டு மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. அதன்பிறகு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும். பொன்னம்பலமேட்டில் மகரஜோதியை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். அதன்பிறகு ஜனவரி 20ம் தேதியுடன் இந்த ஆண்டுக்காக மண்டல பூஜை, மகர ஜோதி பூஜை முடிவடைய உள்ளது.
இந்நிலையில் தான் கார்த்திகை மாதம் துவக்கத்தை விட தற்போது ஐயப்பன் கோவில் வரும் பக்தர்களின் எண்ணிக்கை என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது. தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வருவதாக கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில் தான் தற்போது பக்தர்களின் எண்ணிக்கையை கட்டுக்கடங்காத வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையை திருவிதாங்கூர் தேவசம் போர்டும், போலீசாரும் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.
இதனால் கடந்த 5 நாட்களாக சபரிமலையில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் பல பக்தர்கள் கூட்டத்தை பார்த்து மிரண்டு போய் தரிசனம் செய்யாமல் பந்தளத்தில் வீடு திரும்பி வருகின்றனர். இதற்கிடையே தான் தற்போது இணையதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி வருகிறது. இந்த வீடியோ என்பது நீலக்கல் பகுதியில் எடுக்ககப்பட்டுள்ளது.
அதாவது சபரிமலை பக்தர்கள் தரிசனத்துக்காக சென்றுள்ளனர். அப்போது அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பக்தர்கள் வாகனம் ஒன்றில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அப்போது வாகனத்தில் இருந்த சிறுவனின் தந்தை காணாமல் போயுள்ளார். தனது தந்தை மாயமானதை அறிந்த அந்த சிறுவன் வாகனத்தின் ஜன்னல் வழியே பார்த்தபடி கதறி அழுதார். அப்போது அருகே போலீஸ்காரர் ஒருவர் வர தனது தந்தையை கண்டுபிடித்து தரும்படி அந்த சிறுவன் கைகளை கூப்பியபடி கெஞ்சி கோரிக்கை வைத்தார்.
இதற்கிடையே சிறுவனின் தந்தையும் அங்கு வந்தார். இதையடுத்து சிறுவன் தனது அழுகையை நிறுத்தினான். இதற்கிடையே தான் அந்த சிறுவன் தனது தந்தையை காணவில்லை எனக்கூறி கைகளை கூப்பி கதறி அழுத வீடியோ இணையதளங்களில் வெளியாகி பார்க்கும் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications