1951 முதல் 2019 வரை.. பச்சை கலரு, மஞ்ச கலரில் உருவான புதிய மாநிலங்கள்.. ஒரு பருந்துப் பார்வை!
Recommended Video
ஸ்ரீநகர்: 1951-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை புது புதிதாக ஏராளமான மாநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தியா என்பது தென்காசியாவில் மிக பெரிய நாடு. பரப்பளவில் 2-ஆவது மிகப் பெரிய நாடு, மக்கள்தொகையிலும் மிகப் பெரிய நாடு ஆகும். இந்த தாய் திருநாட்டில் நேற்று வரை 29 மாநிலங்கள் 9 யூனியன் பிரதேசங்கள் இருந்து வந்தன.
இந்த நிலையில் இன்று ஜம்மு- காஷ்மீர் மாநில அந்தஸ்தை இழந்தது. இதனால் இந்தியாவில் மாநிலங்களின் எண்ணிக்கை தற்போது 28 ஆக குறைந்துள்ளது. அது போல் யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.

2019-ஆம் ஆண்டு வரை
1951-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை புதிய புதிய மாநிலங்கள் உருவானது எப்படி என்பது குறித்து பார்ப்போம். கடந்த 1951-ஆம் ஆண்டு சுதேச அரசுகள் ஒருங்கிணைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து 1953-ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தில் இருந்து ஆந்திர பிரிக்கப்பட்டது.

குஜராத்
1954 ஆம் ஆண்டு புதுச்சேரி, மாஹே, யேனம், காரைக்கால், சந்தர்நகர் ஆகியன யூனியன் பிரதேசமாக மாறியது. 1956-ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்களாக இந்திய மாநிலங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டன. 1960ஆம் ஆண்டு மும்பையானது மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் மாநிலமாக பிரிந்தது.

ஹரியாணா உருவாக்கம்
1961-ஆம் ஆண்டு கோவா விடுவிக்கப்பட்டு, தாத்ரா நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டது. நாகாலாந்து என்ற தனிமாநிலம் 1963-ஆம் ஆண்டு உருவானது. 1966-ஆம் ஆண்டு பஞ்சாப் மறுசீரமைக்கப்பட்டது. சில பகுதிகள் ஹிமாச்சல் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டன. ஹரியாணா என்ற மாநிலம் உருவானது.

சத்தீஸ்கர்
1972-ஆம் ஆண்டு மேகாலயா, மிசோரம், அருணாசல பிரதேசம் ஆகியன அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டன. 1975-ஆம் ஆண்டு சிக்கிம் என்ற தனி மாநிலம் உருவானது. 2000-ஆம் ஆண்டு உத்தராஞ்சல் (தற்போது உத்தரகாண்ட்), சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

லடாக்
2014-ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்திலிருந்து தெலுங்கானா தனி மாநிலமாக உருவானது. 2019-ஆம் தேதி ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications