அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்- மக்கள் பீதி!
அந்தமான் தீவுகளில் இன்று அதிகலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.
Subscribe to Oneindia Tamil
போர்ட்பிளேயர் : அந்தமான் தீவுகளில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரும் அச்சமடைந்தனர்.
அந்தமான் தீவுகளில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் உருண்டன. கட்டிகள் மற்றும் ஃபேன்கள் குலுங்கின. இதனால் வீடுகளில் தூக்கிக்கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு எழுந்தனர்.

வீடுகளை விட்டு வெளியேறிய அவர்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நில நடுக்கம் காரணமாக வீடுகளுக்குள் செல்ல அச்சமடைந்த மக்கள் வீதிகளிளேயே விடியல் வரை கழித்தனர்.
ரிக்டர் அளவுகோலில் 4.8ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் யாருக்கேனும் காயமோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை.












Click it and Unblock the Notifications