ஆரியங்காவு அய்யப்பன் கோவிலில் மண்டலபூஜை - அணையா விளக்கு ஏற்றப்பட்டது
ஆரியங்காவு: செங்கோட்டை அருகே ஆரியங்காவு அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நேற்று அணையா விளக்கு ஏற்றப்பட்டது.
கேரள மாநிலத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தினமும் பல்லாயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்து 41 நாட்கள் விரதமிருந்து இருமுடிகட்டி வரத் தொடங்கியுள்ளனர்.
சபரிமலையில் மண்டலபூஜை தொடங்குவது போல் செங்கோட்டை அருகே ஆரியங்காவு, குளத்துப்புழை உள்ளிட்ட அய்யப்பன் கோவில்களிலும் மண்டல பூஜை திருவிழா தொடங்கப்படுவது வழக்கம். ஆரியங்காவு அய்யப்பன் கோவிலில் நேற்று மண்டலபூஜை திருவிழாவை முன்னிட்டு அணையா விளக்கு ஏற்றப்பட்டது.
மேலும் 41 நாட்களுக்கு இரவு 6 மணிக்கு விளக்கு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடத்தப்படுகின்றன. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அய்யப்பன் அருள் பெற்று செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications