நீட் தேர்வு..தமிழக அரசின் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.. பிரணாப்பிடம் வலியுறுத்திய அன்புமணி
டெல்லி: மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரும் தமிழக அரசின் சட்டங்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கும்படி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை பேசினார்.

அப்போது 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பான அவசர சட்டத்தை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அது தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அதன் பின்னர் நேற்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை அன்புமணி நேரில் சந்தித்தார். அப்போது மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரும் தமிழக அரசின் சட்டங்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கும்படி வலுயுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications