சீமாந்திரா போராட்டம்: அரசு ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை முன் கடனாக வழங்கும் ஆந்திரா வங்கி

கடந்த 3ம் தேதி, ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா பகுதிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடர்ந்து அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதியில் அரசியல் கட்சிகளும் அரசு ஊழியர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊழியர்களின் போராட்டத்தினால், பொதுமக்கள் மட்டுமின்றி சம்பந்தப்பட்டவர்களின் குடும்பமும் பாதிக்கப் பட்டு வருகிறது. எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு "சூப்பர் சேலரி அக்கவுண்ட்" என்ற அடிப்படையில் கடன் வழங்க ஆந்திர அரசுக்கு சொந்தமான ஆந்திர வங்கி முன்வந்தது.
இதனைத் தொடர்ந்து தங்களது வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அரசு ஊழியர்களுக்கு ஒரு மாதம் சம்பளத்தை முன் கடனாக வழங்கி வருகிறது ஆந்திரா வங்கி. முன்கடனாக வழங்கப் படுகின்ற இத்தொகையானது பின்னர் அவர்களது சம்பளத்திலிருந்து இரண்டு மாத தவணையாக பிடித்துக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
13.5 சதவிகிதம் வட்டியுடன் தரப்படுகின்ற இந்த கடன் திட்டத்திற்கு ஊழியர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications