வங்கி கடன் தொகையை திரும்ப செலுத்தாத ஆந்திர எம்.பி வீட்டில் சோதனை நடத்திய சிபிஐ
நந்தியால்: கடன் தொகையை திரும்ப செலுத்தாத எம்பி வீட்டில் சிபிஐ சோதனை நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள நந்தியால் தொகுதி எம்.பி-யான எஸ்.பி.ஒய்.ரெட்டியின் வீட்டில் தான் சிபிஐ ரெய்டு நடந்துள்ளது.
நந்தியால் தொகுதி எம்பி எஸ்.பி.ஒய்.ரெட்டி கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்றிருந்தார்.

பின்னர் இவர் கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். ஆந்திராவின் குர்நூல் மாவட்டத்தில் இவர் நந்தி குரூப் ஆஃப் கம்பெனி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்நிறுவனத்தின் மூலம் பிவிசி பைப், சிமெண்ட் மற்றும் கட்டுமான தொழில்கள் உள்ளிட்டவற்றை செய்கிறார். மேலும் நந்தி குரூப் ஆஃப் கம்பெனியின் பெயரில் எஸ்பிஐ மற்றும் சிண்டிகெட் வங்கிகளில் இவர் மொத்தமாக ரூ500 கோடி கடன் பெற்றுள்ளார்.
ஆனால் இந்த கடன் தொகையை அவர் சரிவர திரும்ப செலுத்தவில்லை என வங்கிகள் புகார் தெரிவித்தன. வங்கிகளின் புகாரையடுத்து எஸ்.பி.ஒய்.ரெட்டியின் வீட்டினில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
சோதனை நடைபெற்ற போது எம்பி ரெட்டி உடல்நலக் குறைவால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ரெய்டின் போது எம்பியின் மருமகன் வீட்டில் இருந்துள்ளார்.
சோதனை குறித்து அவர் கூறுகையில், வங்கி கொடுத்த புகாரின் அடிப்படையில் எங்கள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. முடிவில் ரூ.14 ஆயிரம் பணம் மற்றும் 400 கிராம் தங்க நகைகள் எடுத்து செல்லப்பட்டுள்ளது என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications