"லாபம் மட்டுமே உங்களுக்கு குறிக்கோள்"- செல்போன் நிறுவனங்கள் மீது ஆந்திர முதல்வர் பாய்ச்சல்
ஹைதராபாத்: உங்களால்தான் மீட்பு பணிகளில் பாதிவேலை கெட்டுவிட்டது, வெறும் லாபம் சம்பாதிப்பது மட்டுமே உங்கள் நோக்கமாக உள்ளது என்று செல்போன் நெட்வொர்க் அதிகாரிகளை பார்த்து எரிந்து விழுந்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.
ஹுட்ஹுட் புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு செல்போன் டவர்கள் செயல்படாததால் ஆந்திராவில் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சந்திரபாபு நாயுடு இன்று செல்போன் நெட்வொர்க் ஆபரேட்டர்களின் உயர் மட்ட குழு ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது நாயுடு தனது பொறுமையை இழந்து காணப்பட்டார்.

சந்திரபாபு நாயுடு கூறியதாவது: உங்கள் நெட்வொர்க்குகள், புயல் போய் இரு நாட்களாகியும் ஏன் செயல்படவில்லை என்பதற்கு நேரடியாக பதிலை சொல்லுங்கள். மின்சாரம் இல்லை என்றால் 5 குதிரைசக்தி கொண்ட ஒரு டீசல் ஜெனரேட்டரை வைத்து உங்கள் டவர்களை நீங்கள் இயக்கியிருக்கலாம். ஆனால், அதை செய்யாமல் மின்சாரம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று காத்திருக்கிறீர்கள். அதாவது, உங்களுக்கு லாபம் மட்டுமே நோக்கமாக இருக்கிறது. டீசலுக்கு செலவிட கூட உங்களுக்கு மனது வரவில்லை.
நீங்கள் அரசையும், மக்களையும் ஏய்த்து வருகின்றீர்கள். மீட்பு பணியில் 50 சதவீதம் தகவல் தொடர்பால் பாதிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் உத்தரவிட முடியாதபடி தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வந்திருந்தபோது கூட தொலைபேசி வேலை செய்யாமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினோம்.
செல்போன் நெட்வொர்க்குகள் ஒரு திட்டத்தோடு வர வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறைந்த விலையில் செல்போன் பேச திட்டத்தை அறிமுகப்படுத்துங்கள். ஆங்காங்கு செல்போன்களை சார்ஜ் செய்யும் பூத்துகளை நிறுவுங்கள். இவ்வாறு முதல்வர் உத்தரவிட்டார்.
பாரதி குரூப் சேர்மன் சுனில் மிட்டல் கூறுகையில், அக்டோபர் 18ம்தேதி மாலைக்குள் செல்போன் நெட்வொர்க்குகள் பழைய நிலைக்கு திரும்பும் என்றார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications