தொடர் கனமழை.. மிதக்கும் ஆந்திரா, தெலுங்கானா... மீட்புப் பணியில் ராணுவம் தீவிரம்
ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் வெள்ள மீட்புப் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

ஹைதராபாத் உட்பட பல மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பல இடங்கள் போக்குவரத்து வசதியின்றி துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ள மீட்புப் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் கட்டுப்பாட்டு அறைகளைத் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, நகரின் பல பகுதிகளில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உணவு, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அரசு அதிகாரிகளும், தன்னார்வ தொண்டர்களும் வழங்கி வருகின்றனர்.
வெள்ளம் காரணமாக பல பகுதிகளில் தண்டவாளங்கள் அடித்துச் செல்லப்பட்டதால், ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 21 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

இதுவரை வெள்ளத்தில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் நேற்று முன்தினம் மேடக் மாவட்டத்தில் மட்டும் நான்கு பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, இன்னும் 5 நாட்களுக்கு பலத்த அல்லது மிக பலத்த மழை பெய்யும் வானிலை மையம் எச்சரித்துள்ளது மக்களிடையே பீதியை அதிகரித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications