வாஸ்துப்படி உருவாகும் ஆந்திராவின் புதிய தலைநகர்...!
அமராவதி, ஆந்திரா: அதி நவீன நகராக ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதி உருவாகும் அதே நேரத்தில் வாஸ்துப்படியும் அதை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. இதற்கான பணியில் அவரது வாஸ்து ஆலோசகர் என்.ராகவய்யா முழு மூச்சில் இறங்கியுள்ளார்.
அமராவதி நகரில் முகாமிட்டு இதுதொடர்பான ஆலோசனைகளையும் ராகவய்யா வழங்கி வருகிறார். அதன்படி அதிகாரிகளும் செயல்பட்டு வருகின்றனராம்.
புதிய தலைநகருக்கு அக்டோபர் 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டவுள்ளார். இதற்கான முன்கூட்டிய பூஜைகள் தற்போது தொடங்கியுள்ளன.

அமராவதி
ஆந்திராவைப் பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் உருவாகி விட்டது. தெலுங்கானா பகுதிக்குள் வரும் ஹைதராபாத் இரு மாநிலங்களின் பொதுவான தலைநகராக 10 வருடம் வரை இருக்கும். இதையடுத்து தனது புதிய தலைநகராக அமராவதியை அடையாளம் கண்டுள்ளது ஆந்திரா.

கிருஷ்ணா நதியோரம்
கிருஷ்ணா நதிக்கரையோரமாக இந்தப் புதிய தலைநகரா உருவாக்குகிறது ஆந்திர அரசு. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டது. அதி நவீன நகராக இது உருவாகவுள்ளது. அதேசமயம் முற்றிலும் வாஸ்துப்படியும் இதை உருவாக்குகிறார்களாம்.

சிறப்புப் பூஜைகள் - ஹோமங்கள்
அக்டோபர் 22ம் புதிய தலைநகருக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதையொட்டி வாஸ்துப்படியான பூஜைகளும், ஹோமங்களும் அமராவதியில் தொடங்கியுள்ளன.

22ம் தேதி வரை நீடிக்கும்
இந்தப் பூஜைகளும், ஹோமங்களும் அக்டோபர் 22ம் தேதி வரை தொடருமாம். இந்தப் பூஜைகளையும், ஹோமங்களையும் நாயுடுவின் வாஸ்து ஆலோசகரான ராகவய்யா நேரில் போய் மேற்பார்வையிட்டு வருகிறார்.

மேடை அமைப்புப் பணி
மேலும் அடிக்கல் நாட்டு விழாவுக்கான மேடை அமைப்பிலும் வாஸ்து பார்க்கப்படுகிறதாம். விவிஐபிக்கள் மற்றும் விபிஐக்கள் மேடைக்கு வரும் நுழைவுப் பாதை கிருஷ்ணா நதியை நோக்கி பார்க்கும்படி அமைக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளாராம். ராகவய்யாவுக்கு உதவியாக கிருஷ்ணா மற்றும் குண்டூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளும் உடன் இருக்கிறார்களாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications