தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் வழங்க ஆந்திரா ஒப்புதல்! பன்னீர்செல்வம் பயணத்திற்கு வெற்றி
தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் வழங்க ஆந்திர அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இருமாநில முதல்வர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அமராவதி: தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் வழங்க ஆந்திர அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆந்திர தலைநகர் அமராவதிக்கு சென்றார். அங்கு அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து 2.5 டிஎம்சி தண்ணீர் வழங்க ஆந்திர அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இருமாநில முதல்வர்களின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பராமரிப்பு தொகை 433 கோடி ரூபாய் ஒதுக்குவது குறித்து அடுத்த வாரம் திருப்பதியில் அடுத்த வாரம் இருமாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வரை யாரும் எடுக்காத முயற்சியாக முதல் முறையாக ஆந்திராவுக்கு நேரில் சென்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், நடத்திய பேச்சுக்கு ஒரு நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது.
தெலுங்கு கங்கை நீர் பங்கீடு தொடர்பாக ஆந்திரா சென்று, அம்மாநில முதல்வருடன் தமிழக முதல்வர் ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தியது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு இரண்டு மாநிலங்களுக்கும் இடையே கடிதப்போக்குவரத்து மட்டுமே இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications