ஹசாரேவையும் 'கேஸரி'வாலையும் பிரிக்க பல கோடியை கொட்டி செலவு பண்றாங்களாம்....!!
டெல்லி: சமூக சேவகர் அண்ணா ஹசாரேவையும் தம்மையும் பிரிக்க பல கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் நேற்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், அண்ணா ஹசாரேவும், நானும் இணைந்து செயல்படுவது தொடர்பாக பல பேருக்கு, அவர்கள் மீது அணுகுண்டு விழுந்து விடும் என அச்சம் உருவாகியுள்ளது.

அரசியல் உள்நோக்கத்தோடு, எங்களைப் பிரிக்க நினைப்பவர்களின் பெயர்களை வெளியிட விரும்பவில்லை. டெல்லியில் அரசமைப்பது குறித்து எங்கள் கட்சியில் உள்ள சிலருக்கு விருப்பம் இருந்தாலும், தனிப்பட்ட விதத்தில் டெல்லியில் அரசு அமைப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு அறிவிக்கப்படும். தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள ஜன லோக்பால் மசோதாவை மேலும் வலுவுள்ளதாக மாற்ற தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும். என் இதயத்தில் குடியிருக்கும் அண்ணா ஹசாரேவிடம் மீண்டும் ஒரே மேடையைப் பகிர்வேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications