Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈராக்கிலிருந்து நாடு திரும்பிய மேலும் 200 இந்தியர்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஈராக்கிலிருந்து 46 இந்திய நர்ஸ்கள் உள்ளிட்டோர் மீட்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 200 இந்தியர்கள் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.

Another 200 Indian Nationals Return From Iraq

இன்று காலை இவர்கள் டெல்லி வந்து சேர்ந்தனர். இவர்களை நஜப் என்ற இடத்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் மத்திய அரசு அழைத்து வந்துள்ளது.

நாடு திரும்பிய இந்தியர்களில் ஒருவர் கூறுகையில், ஈராக்கில் நிலைமை மோசமாக உள்ளது. இந்தியத் தூதரகம் எங்களை மீட்பதற்கான முயற்சிகளை சிறப்பாக செய்தது. அதற்காக நன்றி கூறுகிறோம் என்றார்.

இதற்கிடையே, அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் 400 இந்தியர்கள் அழைத்து வரப்படவுள்ளனராம். இவர்கள் மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத்துக்கு அழைத்து வரப்படவுள்ளனர். இத்தகவலை வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.

39 கட்டுமானத் தொழிலாளர்கள் தொடர்ந்து தீவிரவாதிகள் பிடியில்:

இதற்கிடையே, மொசூல் நகரில் இன்னுநம் 39 இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் தீவிரவாதிகளின் பிடியில் உள்ளனர். இவர்கள் 2 வாரங்களுக்கு முன்பு பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்தார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+