சாய்பா மீதான விமர்சனம்: துவாரக பீட சங்கராச்சாரியார் மீது ஆந்திராவிலும் புகார்!!
Subscribe to Oneindia Tamil

சாய்பாபா கடவுள் அவதாரம் கிடையாது என்றும் கூறியுள்ளார். அவரை குருவாக ஏற்றுக்கொள்வதில் தவறில்லை. ஆனால் கடவுளாக கொண்டாடக்கூடாது என்று கூறியிருந்தார் துவாரக பீட சங்கராச்சாரியார்.
இதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவின் சீரடி மற்றும் மத்திய பிரதேசத்தின் இந்தூர் ஆகிய இடங்களில் தங்களது மத உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக துவாரக பீட சங்கராச்சாரியார் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆந்திராவின் சரூர் நகரில் சாய்பாபா கோயிலை நிர்வகித்து வரும் சீரடி சாய் டிரஸ்ட் அமைப்பினர் அப்பகுதி போலீசில் இன்று சங்கராச்சாரியார் மீது புகார் கொடுத்துள்ளனர். அதில் தங்களது உணர்வுகளை துவாரக பீட சங்கராச்சாரி புண்படுத்திவிட்டார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications