அத்தை பக்கத்திலேயே.. புதர் கிட்ட அக்கிரமம்.. பெண்ணின் ஆடைகளை உருவி.. 4 பேருமே எஸ்கேப்.. கொடுமை
ஆட்டோவில் சென்ற பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்துள்ளது
கான்பூர்: ஆட்டோவில் சென்று கொண்டிருந்த பெண்ணை 4 பேர் சுற்றி வளைத்து பலாத்காரம் செய்த சம்பவம் மீண்டும் உபியை உலுக்கி எடுத்து வருகிறது.
நாளுக்கு நாள் உத்தர பிரதேசம் மாநிலத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது காணாமல் போய் கொண்டிருக்கிறது.. பெண்கள் மீதான வன்முறைகளும் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி அன்றுகூட கொடுமை ஒன்று நடந்தது.. 13 வயது சிறுமியை போபாலுக்கு கடத்தி சென்று 4 பேர் பலாத்காரம் செய்துள்ளனர்..
கிராமம்
பிறகு அந்த சிறுமியை அவரது கிராமத்தில் இறக்கிவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றுவிட்டனர்.. நடந்த விஷயத்தை சிறுமி அவரது தந்தையிடம் சொல்லியதையடுத்து, லலித்பூரில் ஸ்டேஷனிலும் பலாத்காரம் செய்தவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது... இந்த புகாரில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக சிறுமியை மறுநாள் ஸ்டேஷனுக்கு வரவழைத்துள்ளார், அந்த காவல் நிலையப் பொறுப்பாளர் அதிகாரி திலக்தாரி சரோஜ் என்பவர்..
பலாத்காரம்
அந்த சிறுமியை ஸ்டேஷனுக்குள் இருந்த ரூமிக்குள்ளேயே அழைத்து சென்று அங்கு மறுபடியும் பலாத்காரம் செய்தாராம்.. இந்த சம்பவத்தின் அதிர்ச்சி முடிவதற்குள் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.. தானேபூர் பகுதியில், ஏப்ரல் 23 ம் தேதி இளம்பெண் ஒருவர் தன்னுடைய அத்தையுடன் சொந்த கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தார்.. அந்த கிராமத்தில் உறவினர் ஒருவர் உடல்நலம் குன்றி இருப்பதால் அவரை பார்ப்பதற்காக அத்தையுடன் சென்றார்.
புதர் - செங்கல் சூளை
அப்போது 4 பேர் கொண்ட கும்பல் அந்த ஆட்டோவை வழிமறித்துள்ளனர்.. நாலு பேரும் ஆட்டோவில் இருந்த பெண்ணை பிடித்து வெளியே இழுத்து தள்ளி உள்ளனர்.. அதை தடுக்க வந்த அத்தையையும் மிரட்டி தாக்கி உள்ளனர்.. பிறகு அருகில் இருந்த புதர் பகுதிக்குள் இளம்பெண்ணை இழுத்து சென்று, ஆடைகளை கிழித்துள்ளனர்.. அங்கிருந்த செங்கல் சூளையில் 4 பேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரத்திலும் ஈடுபட்டுள்ளனர்.. மேலும் இந்த சம்பவத்தை வீடியோவாகவும் எடுத்து அவர்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு விட்டனர். வீடியோ வைரலாகி பார்ப்போருக்கு தூக்கி வாரிப்போட்டது..
அத்தை
கடைசியில் தானேபூர் போலீசாரின் கண்ணிலும் இந்த வீடியோ தெரியவந்ததையடுத்து அவர்களும் அதிர்ச்சியானார்கள்.. இறுதியில், தானாகவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளனர்.. போலீஸ் இந்த விஷயத்தை கையில் எடுப்பது தெரிந்ததுமே, அந்த அத்தை போலீசில் புகார் தர முன்வந்துள்ளாராம்.. ஸ்டேஷனுக்கு சென்றால் பெண்ணின் குடும்ப மானம் போய்விடும் என்பதால், தயங்கி இருந்துள்ளார்.. காவல் துறையே இதில் இறங்கிவிடவும், துணிந்து புகார் தந்துள்ளார்.. அந்த 4 குற்றவாளிகளும் தலைமறைவாகி உள்ள நிலையில் அவர்களை தேடி வருகிறார்கள்.