ஐ.என்.எஸ். கொல்கத்தா கப்பலில் பயங்கர விபத்து: கடற்படை அதிகாரி பலி
மும்பை: மும்பை துறைமுகத்தில் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ஐஎன்எஸ் கொல்கத்தா போர்க் கப்பலில் ஏற்பட்ட விபத்தில் அதிகாரி ஒருவர் பலியானார்.
ஐஎன்எஸ் கொல்கத்தா போர்க் கப்பல் மும்பை துறைமுகத்தில் வைத்து சோதனை செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அந்த கப்பலில் உள்ள என்ஜின் அறையில் இன்று மதியம் 1 மணி அளவில் பயங்கர வெடி சத்தம் கேட்டது. கட்டப்பட்டு வந்த என்ஜின் அறையில் உள்ள கார்பன் டை ஆக்சைடு சிலிண்டரின் மேல் உள்ள வால்வு வெடித்துள்ளது.
இதில் கமாண்டர் பிரிவில் உள்ள அதிகாரி ஒருவர் பலியானார். இந்த கப்பல் அடுத்த மாதம் இந்திய கடற்படையில் சேர்க்கப்படவிருந்தது.
முன்னதாக கடந்த வாரம் மும்பை துறைமுகத்தில் ஐஎன்எஸ் சிந்துரத்னா நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியாகினர், 5 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து கடற்படை தளபதி அட்மிரல் டி.கே.ஜோஷி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் அதே மும்பை துறைமுகத்தில் மீண்டும் ஒரு கப்பலில் விபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications