For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

416 பாக்கெட்டுகள்.. 52 கிலோ "சூப்பர்-90" வகை வெடிமருந்து.. காஷ்மீரில் தீவிரவாத சதி முறியடிப்பு!

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: புல்வாமா தாக்குதல் போலவே எல்லையில் தீவிரவாதிகள் நடத்த திட்டமிட்டு இருந்த தாக்குதல் தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் இதற்காக 52 கிலோ வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடம் பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் படை வீரர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இதேபோல் இன்னொரு தாக்குதலை நடத்த காஷ்மீரில் தீவிரவாதிகள் திட்டமிட்டு இருந்த நிலையில் அந்த திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது.

காஷ்மீர் பிரச்சனையில் புதிய சுனாமி... கில்ஜிட்- பால்டிஸ்தானை தனி மாகாணமாக அறிவிக்கப் போகிறதாம் பாக்.காஷ்மீர் பிரச்சனையில் புதிய சுனாமி... கில்ஜிட்- பால்டிஸ்தானை தனி மாகாணமாக அறிவிக்கப் போகிறதாம் பாக்.

சோதனை

சோதனை

காஷ்மீரில் உள்ள கடிகால் பகுதி அருகே இருக்கும் கரேவா என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது . உளவு தகவலின் அடிப்படையில் இங்கே போலீசார் மற்றும் 42 ராஷ்டிரிய ரைபில் படையினர் இணைந்து கூட்டு சோதனையில் ஈடுப்பட்டு இருக்கிறார்கள். கரேவா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நடந்த சோதனையில் 52 கிலோ வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மருந்து

மருந்து

அந்த வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் 416 பாக்கெட்டுகள் வெடி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாக்கெட்டும் 125 கிராம் இருந்துள்ளது. இதன் மூலம் 50 சிறிய ரக குண்டுகளை உருவாக்க முடியும். மொத்தம் 50 டெட்டனேட்டர்கள் இங்கே கண்டுபிடிக்கப்பட்டள்ளது .

என்ன தாக்குதல்

என்ன தாக்குதல்

இந்த வீடு, புல்வாமா தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த வெடி மருந்து மிகவும் வித்தியாசமானது என்கிறார்கள். இதை "Super-90" அல்லது S-90 என்று அழைப்பார்கள். இது மிகவும் சக்தி வாய்ந்த குண்டுகள். இந்த வெடிமருந்து அதிக சேதத்தை உண்டாக்கும் திறனை கொண்டது.

உளவு தகவல்

உளவு தகவல்

சரியான நேரத்தில் கிடைத்த உளவு தகவல் காரணமாக இந்த வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புல்வாமா தாக்குதல் போல இன்னொரு தாக்குதலை நிகழ்த்தி இருக்கலாம். ஆனால் அதை தற்போது தடுத்து இருக்கிறோம். இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறோம் என்று 42 ராஷ்டிரிய ரைபில் படையினர் விளக்கம் அளித்துள்ளது.

English summary
Another Pulwama Attack prevented in Kashmir: 52 Kg explosive sized in the border by 42 Rashtriya Rifles.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X