தெலுங்கானா விவகாரம்: ஆந்திர முதல்வர் ராஜினாமா, காங்கிரஸில் இருந்தும் விலகல்
ஹைதராபாத்: தெலுங்கானா விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநில முதல்வர் கிரண் குமார் ரெட்டி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகினார்.
தெலுங்கானாவை தனி மாநிலமாக்க ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் அமளிக்கு இடையே தெலுங்கானா மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்படுகிறது.

இதற்கு கண்டனம் தெரிவித்து கிரண் குமார் ரெட்டி தனது பதவியை இன்று ராஜினாமா செய்வார் என்று கூறப்பட்டது. அதன்படி அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகியுள்ளார். அவர் தனி கட்சி துவங்கலாம் என்றும், அவரது ஆதரவாளர்களின் கட்சியில் சேரலாம் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக ரெட்டி தனது பொருட்களை தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்து எடுத்துச் சென்றுவிட்டார். மேலும் அவரது அரசு வீட்டில் உள்ள பொருட்களையும் எடுத்துச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் சிரஞ்சீவி தெலுங்கானா விவகாரம் தொடர்பாக ராஜ்யசபாவை முடக்குவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications