20 தமிழர் படுகொலை: போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய ஹைதராபாத் ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!
ஹைதராபாத்: 20 தமிழர் படுகொலை விவகாரத்தில் ஆந்திரா காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய ஹைதராபாத் உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. முன்னதாக ஆந்திரா போலீசார் மீது ஏன் ஐ.பி.சி. 302வது பிரிவின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யவில்லை என்று உயர்நீதிமன்றம் கண்டனமும் தெரிவித்தது.
திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர போலீசாரால் 20 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிக் கோரி மக்கள் உரிமைகள் குழு சார்பில் ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆந்திர மாநில காவல்துறை தலைவர் ராமுடு 16 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில் ஆந்திர வனத்துறை சட்டம் மற்றும் ஐ.பி.சி. 307வது பிரிவுகளின் கீழ் படுகொலை செய்யப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை இன்று காலை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கல்யாண் சிங் குப்தா, காவல்துறை தலைவரின் அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என்று நிராகரித்தார்.
மேலும் இந்த என்கவுண்ட்டர் சம்பவம் இரண்டு மாநிலங்கள் தொடர்புடைய பிரச்சனை என்பதால், உள்ளுர் காவல்துறை விசாரணையை எப்படி ஏற்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் நடைபெற்றது.
அப்போது, 20 தமிழரை சுட்டுப் படுகொலை செய்த போலீசார் பெயர்களைக் குறிப்பிட்டு ஏன் ஐ.பி.சி. 302வது பிரிவின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யவில்லை என்று தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
மேலும் அந்த போலீசார் அனைவர் மீதும் ஆந்திரா மாநில அரசு உடனடியாக கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் தலைமை நீதிபதி கல்யான்சிங் குப்தா அதிரடியாக உத்தரவிட்டார். அத்துடன் வரும் திங்களன்று இந்த வழக்கில் கூடுதல் விவரங்களை ஆந்திரா அரசு தாக்கல் செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications