ஆந்திராவில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்!
Subscribe to Oneindia Tamil

தெலுங்கானாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து 70 நாட்களுக்கும் மேலாக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனை முடிவுக்குக் கொண்டுவர முதல்வர் கிரண்குமார் ரெட்டி நேற்று நடத்திய பேச்சுவார்த்தை 7 மணி நேரம் நீடித்தது.
இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. ஏற்கனவே ஆந்திர மாநில தலைமைச் செயலக மற்றும் மின்வாரிய ஊழியர்களும் தங்களது போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த 13 மாவட்டங்களில் இன்று முதல் வழக்கம் போல் பேருந்துகள் இயங்கத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications