ஆஹா.. 3000 கி.மீ தூரத்துக்கு ரெடியாகிறது "கவாச்"! மத்திய அரசு எடுத்த அதிரடி.. இனிமேல் நிம்மதி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்தையடுத்து, மத்திய ரயில்வே அமைச்சகம் முக்கிய அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறது.
இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே மோசமான ரயில் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.. இப்படித்தான் கடந்த வருடம் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் கிட்டத்தட்ட 280 பேர் உயிரிழந்தனர்.

நேற்றுமுன்தினம்கூட, மேற்கு வங்க மாநிலத்தில் ரயில் விபத்து நடந்துள்ளது.. கொல்கத்தா நோக்கி சென்ற கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 15 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த ரயில் விபத்தை தொடர்ந்து கவாச் குறித்த கேள்வி எழுந்துள்ளது.
தண்டவாளம்: எப்போதெல்லாம் இதுபோன்ற ரயில் விபத்துகள் நடக்கின்றனவோ, அப்போதெல்லாம் கவாச் குறித்த சலசலப்பு எழுந்துவருகிறது.. தண்டவாளங்களில் இரண்டு ரயில்கள் மோதுவதை தடுக்கும் பாதுகாப்பு அமைப்புதான் இந்த கவாச்.
ரயில்வே துறையின் ஆர்டிஎஸ்ஓ எனப்படும், ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பு, கவச் என்ற தொழில்நுட்பத்தை 2019ல் உருவாக்கியது. ரயில் டிரைவர்கள் அவசர காலத்தில் ரயிலை நிறுத்தாமல் போனால், எதிர்வரும் ஆபத்தை உணர்ந்து ரயில் தானாகவே நிற்கும்படியான தொழில்நுட்பத்தை இந்த "கவச்" அளிக்கிறது.
சான்றிதழ்: இந்த கவாச் குறித்து ரயில்வே அமைச்சகம் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.. அதில், "கவச் தொழில்நுட்பத்துக்கு 2019ல் சான்று அளிக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா பரவல் காரணமாக பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இப்போது நிலவரப்படி, 1465 கி.மீ. தூர வழித்தடங்கள், 121 ரயில்களில் இந்த தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 3000 கி.மீ. தூரத்திற்கு கவச் தொழில்நுட்பத்தை அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
ரயில் தடங்களில் கண்ணாடி வட கம்பிகள், தொலைத்தொடர்பு கருவிகள் மற்றும் கோபுரங்கள் அமைப்பது, ரயில்வே ஸ்டேஷன்களில் தரவு மையங்கள் அமைப்பது, இறுதியில் ரயில்களில் கருவிகளை நிர்மாணிப்பது உட்பட பல்வேறு பணிகள் தொடர்புடையதால் நீண்ட கால அவகாசம் ஆகிறது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications