பஞ்சாபில் "ஷாக்".. சிறை உடைப்பு... காலிஸ்தான் தலைவரை அதிரடியாக விடுவித்த 10 பேர் கும்பல் #nabhajail
பஞ்சாப் மாநிலம் நாபாவில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த காலிஸ்தான் விடுதலைப் படை தலைவர் மின்டூவை 10 பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய கும்பல் துணிகரமாக மீட்டுச் சென்றது.
நாபா, பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் நாபா நகரில் உள்ள சிறைச்சாலைக்குள் 10 பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய கும்பல் புகுந்து, சிறைச்சாலையை உடைத்து அங்கு அடைக்கப்பட்டிருந்த காலிஸ்தான் விடுதலைப் படையின் தலைவர் ஹர்மீந்தர் சிங் மின்டூ மற்றும் 4 பேரை மீட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாடாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. போலீஸ் சீருடையில் இந்தக் கும்பல் வந்துள்ளது. கையில் அதி நவீன துப்பாக்கிகளுடன் வந்த இக்கும்பல் சரமாரியாக சுட்டபடி சிறைக்குள் புகுந்தது. அங்கிருந்த மின்டூ மற்றும் 4 கைதிகளை மீட்டு துணிகரமாக தப்பிச் சென்றது.

மின்டூ தவிர மீட்டுச் செல்லப்பட்ட மற்றவர்கள் - குர்ப்ரீத் சிங், விக்கி கோந்த்ரா, நிதின் தியோல், விக்ரம்ஜித் சிங் விக்கி ஆகியோர் என்று தெரிய வந்துள்ளது.
சம்பவ இடத்திற்குப் போலீஸார் விரைந்துள்ளனர். அப்பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. தப்பி ஓடிய கும்பலைப் பிடிக்க முழு அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே காலிஸ்தான் போராளிகள், மின்டூவை மீட்க முயற்சிக்கலாம் என்று உளவுத் தகவல் இருந்தது. ஆனாலும் சிறையில் போதிய பாதுகாப்பை அதிகரிக்க போலீஸ் தரப்பு தவறி விட்டது. இதனால்தான் இன்று சிறைச்சாலை உடைக்கப்பட்ட பெரும் பரபரப்பு அரங்கேறி விட்டது.
10 தீவிரவுாத வழக்குகளில் கைது செய்யப்பட்டவர் மின்டூ. கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இவர் கைது செய்யப்பட்டார். டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார். தாய்லாந்திருந்து திரும்பியபோது இவர் பிடிபட்டார்.
2008ம் ஆண்டு சிர்சாவைச் சேர்ந்த தேரா சச்சா செளதா தலைவர் குர்மீத் ரஹீம் சிங் மீதான தாக்குதல், 2010ல் ஹல்வாரா வி்மானப்படைத் தளத்திற்குக் குண்டு வைத்தது உள்ளிட்ட வழக்குகளில் இவர் கைதானவர்.
47 வயதான மின்டூ, வாத்வா சிங் தலைமையிலான பப்பர் கல்சா சர்வதேச அமைப்பு என்ற போராளிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வந்து தனியாக இயங்கி வந்தவர். 2009 முதல் இவர் தனி காலிஸ்தான் விடுதலைப் படையை நிறுவி செயல்பட்டு வந்தார். பஞ்சாப் போலீஸாருக்குப் பெரும் சவாலாக விளங்கி வந்தவர் மின்டூ.
காலிஸ்தான் போராளிகள், மின்டூவை துணிகரமாக மீட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications