பாகிஸ்தானுடன் போருக்கு தயாராகிறதா இந்தியா? முப்படை தளபதிகளுடன் மோடி திடீர் ஆலோசனை! #army
டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முப்படை தளபதிகளும் இன்று திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியிலுள்ள, எண்- 7 லோக் கல்யாண் மார்க்கிலுள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய படைப்பிரிவுகளின் தளபதிகள் பங்கேற்றனர்.

சமீபத்தில் காஷ்மீர் மாநிலம் யூரி பகுதியில் ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். பாகிஸ்தான் மீது பதிலடி தர வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுக்க எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில் முப்படை தளபதிகளுடனான, மோடியின் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
Delhi: Army, Navy and Air Force Chiefs of Staff leave after meeting PM Narendra Modi at 7 Lok Kalyan Marg #UriAttack pic.twitter.com/YxO1xKootq
— ANI (@ANI_news) September 24, 2016
இந்த சந்திப்பின் போது, யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்தும் எல்லையில் தற்போது இருக்கும் பாதுகாப்பு நிலவரம் குறித்தும் ராணுவ தளபதிகளிடம் பிரதமர் மோடி கேட்டறிந்ததகாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யூரி தாக்குதலுக்கு பிறகு இரு நாட்டு எல்லைகளிலும் படைகள் குவிக்கப்பட்டுள்ளதால் பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில், பிரதமர் மோடியின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்தியா, போருக்கு தயாராகிறதா என்ற சந்தேகத்தை இந்த சந்திப்பு ஏற்படுத்தியுள்ளது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications