இரவோடு இரவாக இந்திய ராணுவம் எப்படி தாக்கியது தெரியுமா?
டெல்லி: இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க காத்திரு்த இந்திய ராணுவம் செப்டம்பர் 28ம் தேதியை தேர்வு செய்தது. இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் புதன்கிழமை நள்ளிரவு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது.
தாக்குதல் குறித்த விபரம்:
* இரவு 12.30 மணிக்கு இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து தாக்குதலை துவங்கியது.
* பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் 2 கிலோமீட்டர் மற்றும் 500 மீட்டர் தூரம் உள்ளே சென்ற இந்திய ராணுவம் தொடர்ந்து 4 மணிநேரம் தாக்குதல் நடத்தியது.
* பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பிம்பர், ஹாட்ஸ்பிரிங், கேல் மற்றும் லிபா செக்டார்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
* ராணுவ வீரர்கள் பாராசூட்டில் இருந்து குதித்து தீவிரவாத முகாம்களை தாக்கினர். இதில் 7 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் தீவிரவாதிகள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டுள்ளனர்.
* இந்திய ராணுவத்தின் அதிரடி தாக்குதலை அடுத்து பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள கிராம மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று அஞ்சப்படுவதால் மக்கள் வெளியேற்றம்.