2020-ல் இந்தியாவில் தாக்குதலுக்கு சதி- ஐ.எஸ். மனித வெடிகுண்டாக மாற முயன்ற புனே மாணவி திடுக் தகவல்!!
Subscribe to Oneindia Tamil
புனே: 2020ஆம் ஆண்டு இந்தியாவில் பயங்கர தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக அந்த அமைப்பின் மனித வெடிகுண்டாக சேர முயன்ற புனேவைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
ராஜஸ்தானில் அண்மையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மேலாளராக இருந்த சிராஜூதீன் என்ற கர்நாடாகாவைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆட்சேர்க்கும் வேலையை சிராஜூதீன் செய்து வந்ததும் தெரியவந்தது.

சிராஜூதீனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த பிளஸ் 1 மாணி அவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவியிடம் தீவிரவாத தடுப்பு போலீசார் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
- சிராஜூதீனிடம் தொடர்பில் இருந்த அந்த மாணவிக்கு இலங்கை, கென்யா, சிரியா உள்ளிட்ட ஐ.எஸ். ஏஜெண்டுகள் அறிமுகமாகியுள்ளனர்.
- ஐ.எஸ். இயக்கத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜீன்ஸ், டி சர்ட் அணியும் பழக்கத்தை கைவிட்டு திடீரென பர்தாவை அணியும் பழக்கத்தை அந்த மாணவி கடைபிடித்து வந்திருக்கிறார்.
- ஐ.எஸ். இயக்க ஏஜெண்டுகளிடம் தாம் அந்த இயக்கத்தில் இணைந்து மனித வெடிகுண்டாக செயல்படவும் விரும்புவதாக கூறியுள்ளார்.
- அத்துடன் மருத்துவ கல்வி படிக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் ஐ.எஸ். ஏஜெண்டுகளிடம் அம்மாணவி தெரிவித்திருந்தார்.
- அவரது கோரிக்கையை ஏற்று சிரியாவில் மருத்துவ கல்லூரி ஒன்றில் அந்த மாணவி படிப்பதற்கான ஏற்பாடுகளை ஐ.எஸ். இயக்கம் செய்திருந்தது.'
- ஐ.எஸ். இயக்க ஏஜெண்டுகள், ஆதரவாளர்கள் என 200 பேருடன் அந்த மாணவி தொடர்பில் இருந்திருக்கிறார்.
- 2020ஆம் ஆண்டு இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல் நடத்த ஐ.எஸ். இயக்கம் சதித் திட்டம் தீட்டியுள்ளதாகவும் அந்த நாசவேலைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடப்பது தமக்கு தெரியும் எனவும் அவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.
- அந்த மாணவியின் எதிர்காலம் கருதி போலீசார் கவுன்சிலிங் கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
More From
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications