2020-ல் இந்தியாவில் தாக்குதலுக்கு சதி- ஐ.எஸ். மனித வெடிகுண்டாக மாற முயன்ற புனே மாணவி திடுக் தகவல்!!
Subscribe to Oneindia Tamil
புனே: 2020ஆம் ஆண்டு இந்தியாவில் பயங்கர தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக அந்த அமைப்பின் மனித வெடிகுண்டாக சேர முயன்ற புனேவைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
ராஜஸ்தானில் அண்மையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மேலாளராக இருந்த சிராஜூதீன் என்ற கர்நாடாகாவைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆட்சேர்க்கும் வேலையை சிராஜூதீன் செய்து வந்ததும் தெரியவந்தது.

சிராஜூதீனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த பிளஸ் 1 மாணி அவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவியிடம் தீவிரவாத தடுப்பு போலீசார் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
- சிராஜூதீனிடம் தொடர்பில் இருந்த அந்த மாணவிக்கு இலங்கை, கென்யா, சிரியா உள்ளிட்ட ஐ.எஸ். ஏஜெண்டுகள் அறிமுகமாகியுள்ளனர்.
- ஐ.எஸ். இயக்கத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜீன்ஸ், டி சர்ட் அணியும் பழக்கத்தை கைவிட்டு திடீரென பர்தாவை அணியும் பழக்கத்தை அந்த மாணவி கடைபிடித்து வந்திருக்கிறார்.
- ஐ.எஸ். இயக்க ஏஜெண்டுகளிடம் தாம் அந்த இயக்கத்தில் இணைந்து மனித வெடிகுண்டாக செயல்படவும் விரும்புவதாக கூறியுள்ளார்.
- அத்துடன் மருத்துவ கல்வி படிக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் ஐ.எஸ். ஏஜெண்டுகளிடம் அம்மாணவி தெரிவித்திருந்தார்.
- அவரது கோரிக்கையை ஏற்று சிரியாவில் மருத்துவ கல்லூரி ஒன்றில் அந்த மாணவி படிப்பதற்கான ஏற்பாடுகளை ஐ.எஸ். இயக்கம் செய்திருந்தது.'
- ஐ.எஸ். இயக்க ஏஜெண்டுகள், ஆதரவாளர்கள் என 200 பேருடன் அந்த மாணவி தொடர்பில் இருந்திருக்கிறார்.
- 2020ஆம் ஆண்டு இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல் நடத்த ஐ.எஸ். இயக்கம் சதித் திட்டம் தீட்டியுள்ளதாகவும் அந்த நாசவேலைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடப்பது தமக்கு தெரியும் எனவும் அவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.
- அந்த மாணவியின் எதிர்காலம் கருதி போலீசார் கவுன்சிலிங் கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications