யாகூப் மேமன் கருணை மனுவில் பாஜக எம்.பி கையெழுத்து - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அதிருப்தி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: யாகூப் மேமனை தூக்கிலிடுவதற்கு எதிரான கருணை மனுவில் பாஜக எம்.பி சத்ருகன் சின்கா கையெழுத்திட்டது குறித்து மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஒரு பேட்டியில் அவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெட்லி, இது பற்றி சம்பந்தப்பட்டவரிடம் தான் கேட்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

மும்பையில் கடந்த 1993இல் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு மற்றும் 2011ல் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல் ஆகியவற்றில் தொடர்புடையவர்களுக்கு கருணை காட்டுவது பாஜகவின் கொள்கைக்கு எதிரானது என்றும் ஜெட்லி கூறினார்.
யாகூப் மேமனுக்கு கருணைகாட்டக்கோரி, குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்ட மனுவில் சத்ருகன் சின்கா கையெழுத்திட்டது கவலையளிப்பதாக தெரிவித்துள்ளார் அமைச்சர் அருண் ஜெட்லி.











Click it and Unblock the Notifications