மகாத்மா காந்தியை போன்றவர் ராம்தேவ்: இது ஜெட்லி பேச்சு
டெல்லி: யோகா குரு ராம்தேவ் மகாத்மா காந்தியை போன்றவர் என்று பாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி புகாழாரம் சூட்டினார்.
டெல்லியில் சாமியார் ராம்தேவ் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்த பாஜக வெற்றி கொண்டாட்ட கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அருண்ஜெட்லி பேசுகையில்;
"வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ராம்தேவ் மேற்கொண்ட போராட்டங்கள், மகாத்மா காந்தியும், ஜெயபிரகாஷ் நாராயணனும் செய்த பணிக்கு ஈடானது. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், நாட்டு மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு ராம்தேவ் போராடிவருகிறார்.
வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டுவர வேண்டும் என்பதிலும் காந்தியை போலவே எண்ணம் கொண்டுள்ளார் ராம்தேவ்" என்றார்.
பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் பேசுகையில், "ராம்தேவின் தேர்தல் பங்களிப்புக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் பாஜகவுக்காக பாடுபடவில்லை, இந்த நாட்டுக்காக பாடுபட்டுள்ளீர்கள்" என்றார்.