அருணாச்சல பிரதேச இளைஞர் மீது பெங்களூரில் இனவெறி தாக்குதல்? உயிருக்கு போராடும் பரிதாபம்
பெங்களூர்: அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் பெங்களூரில் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். கோமா நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இது ஒரு இனவெறி தாக்குதல் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெங்களூர் கோரமங்களா பகுதியிலுள்ள ஒரு பப் பாரில் கடந்த 4 மாதங்களாக வேலை பார்த்து வருபவர் குவாதுன் கன்கம். 22 வயதாகும் வாலிபரான இவர் அதே பகுதியில் நண்பருடன் அறையொன்றில் தங்கியிருந்தார். நேற்று நள்ளிரவில் அவர் வேலை பார்த்த பப்பிலிருந்து 1 கி.மீ தூரத்தில் தலையில் படுகாயங்களுடன், ரத்த வெள்ளத்தில் சாலையோரம் அவர் பாதி மயக்கமான நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்டு போலீசார், நிமான்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்நிலையில், அவர் கோமா நிலைக்கு போய்விட்டார். இதுகுறித்து கர்நாடகாவிலுள்ள, அருணாச்சல பிரதேச மாணவர் சங்கம் தலைவர் டோகோ ஜான் கூறுகையில், "இது ஒரு இனவெறி தாக்குதல் என சந்தேகிக்கிறோம். எங்கள் சங்கம் சார்பில் பெங்களூரில் போராட்டம் நடத்த உள்ளோம். அருணாச்சல பிரதேச மாநில எம்.எல்.ஏக்கள் குழுவை அழைத்து வந்து பெங்களூர் கமிஷனரிடம் எங்களுக்கு பாதுகாப்பு கேட்டு வலியுறுத்த உள்ளோம்.
எங்களது தோற்றம் வேறுபாடுடன் இருப்பதாலேயே நாங்கள் இந்தியர்கள் அல்ல, சீனர்கள் என கருதிவிட முடியாது" என்றார் கோபமாக.
-
கல்லூரி காதலனுடன் கள்ளக்காதல் + ரூ.1000 கோடி சொத்து.. மகளையே கொன்று நாடகமாடிய பெங்களூர் பெண் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications