கெஜ்ரிவால் நாட்டின் பிரதமர் ஆக விரும்புகிறார்: அன்னா ஹசாரே

ஊழலுக்கு எதிராக போராடுவரும் சமூக ஆர்வலருமான காந்தியவாதிமான அன்னாஹசாரேவைத் தனது குரு என கூறி வருகிறார் ஆம் ஆத்மிக் கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆனால், அன்னாவின் வார்த்தையையும் மீறி அரசியலில் இறங்கினார் கெஜ்ரிவால்.
அதன் தொடர்ச்சியாக, நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் ஆதரவோடு டெல்லியில் ஆட்சி அமைத்தது ஆம் ஆத்மி. டெல்லி முதல்வராக பொறுப்பேற்ற கெஜ்ரிவால், லோக்பால் மசோதாவிற்காக கடந்த வாரம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்துள்ள அன்னா ஹசாரே, கெஜ்ரிவாலைக் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-
டெல்லியில் முதல்வர் பதவியில் இருந்து விலகிய அரவிந்த் கெஜ்ரிவால் உடனடியாக முதல்வருக்காக ஒதுக்கப்பட்ட அரசு வீட்டில் இருந்து வெளியேறிருக்க வேண்டும். ஆனால் கெஜ்ரிவால் அதனை செய்யவில்லை. இதன் மூலம் முன்னாள் டெல்லி முதல்வருக்கு பிரதமர் கனவு இருப்பதை உணர முடிகிறது' என இவ்வாறு அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications